சூரிய ஒளியுடன் மோத பயந்து கண்ணாடிக்குள் ஒளிந்து இருந்த வாகன விளக்குகள் எல்லாம், மெர்குரி விளக்குகள் தந்த தைரியத்தில் உயிர் பெற தொடங்கியிருந்த ஒரு ஞாயிற்றுகிழமை மாலை வேளையில் நான் அந்த ரோட்டை கடப்பதற்க்காக நின்று கொண்டிருந்தேன். எதிர் பக்கம் கம்பத்தின் துணையில் நின்ற விளம்பர குடையின் கீழ் டிராபிக் போலீஸ் எழுந்திருக்க போகும் தோரணையில் உட்கார்ந்து இருந்தார். அவர் வெகு நேரமாக அப்படித்தான் உட்காந்திருப்பார் போல.
சரியாக வரிக்குதிரை பாதை வழி மறு முனைக்கு வந்து முன்னே நகர்ந்து சென்றேன்.மூன்று நிமிட நடையில் நான் ரயில் நிலைய வாசலை அடைந்து விட்டிருந்தேன். அங்கு இருந்த மெட்டல் டிடெக்டரிடம் என்னை ஒப்படைத்து வெளி வருகையில், “உன்னை எல்லாம் பார்த்தா குண்டு வைக்கிறவன் மாதிரியா இருக்கு போ”, என சொல்வது போல் ஒரு ஒலி அனுப்பி வைத்தது.
இன்னும் அரை மணி நேரத்திற்குள் நான் இரவு உணவை முடித்து கொண்டோ, இல்லை தேமே என கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டோ, பிளாட்பார்ம் எண் இரண்டிற்கு சென்றால் நாளை நான் கோவை சென்று விட முடியும் என மூன்று வெவ்வேறு மொழிகளில் ஒலிபெருக்கியில் ஒரு பெண் உறுதி அளித்து கொண்டிருந்தாள். என் கணிப்பு படி அவளுக்கு 30௦ வயது இருக்கலாம். முன் பல் சற்று எடுப்பாகவும் இருக்க கூடும்.
ஆனால் என் முன் வரிசையில் மூன்று சீட் தள்ளி அமர்ந்திருந்த இவள் என் ஊகத்திற்கு எல்லாம் இடம் அளிக்கவில்லை. தமிழ் நாட்டின் சராசரி நிறத்திற்க்கு சற்று கூடுதல். என்னோடு ஒட்டி நின்றால் நான் அவள் நெற்றியில் முத்தமிடும் அளவு உயரம். கன்னக் குழி, காதோரம் சுருண்ட முடி, உதட்டின் அலட்சியம் என அவள் மேல் இருந்த பார்வையை தவிர்க்க முடியாமல் போக இன்னும் பிற காரணங்கள்.
அவள் எழுந்து சென்ற உடன், அனிச்சையாக நானும் அவள் பின்னாலே சென்றேன். என்னை எந்த தர்மசங்கடத்திற்க்கும் ஆளாக்காமல் அவள் அங்கிருந்த புத்தக கடையை நோக்கித்தான் சென்றாள். நானும் அந்த சமயத்திற்கு எனக்கு தேவைப்பட்ட ஒரு இண்டலெக்சுவல் தோரணை அணிந்து கொண்டு அங்கில இதழ்களை புரட்டி கொண்டிருந்தேன். அந்த சமயம் அங்கில இதழ்களை புரட்டுவது ஒருவகையில் அவள் அழகுக்கு முன் எனக்கு ஏற்பட்ட சின்ன சறுக்கலை சரிப்படுத்தி கொள்ளவும், மேலும் அவள் என்னை பார்க்க நேர்ந்தால், நான் அவளை பார்க்காதது போல் முகத்தை புதைத்து கொள்ள ஏதுவாகவும் இருந்தது.
பின் என்ன நினைத்தாலோ தெரியவில்லை மீண்டும் சென்று அமர்ந்து விட்டாள். இதுவரை அணிந்திருந்த இண்டலெக்சுவல் தோரணைக்கு சாட்சியான அந்த கடைக்காரனிடம் 15 ருபாய் கொடுத்து ஒரு ஆங்கில இதழ் வாங்கி வந்தேன். இப்போது அவள் நான் இருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்தாள், நான் எந்த வித சலனமும் இல்லாமல் வாங்கி வந்த புத்தகத்தை புரட்ட தொடங்கினேன்.
சற்று தள்ளி இருக்கையில் அவளை பார்த்ததில் ஒரு சுவாரசியம் இருந்தது, ஒருவேளை அவள் வேறு யாரையோ பார்த்து சிரித்தாலோ கை அசைத்தாலோ நம்மை பார்ப்பதாக ஒரு கற்பனை பண்ணி கொள்ளலாம். அருகில் அமர்ந்த பின் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது, ஆனால் இப்போதும் எங்களை கடந்து போவோர் எங்களை பார்க்கையில் என்னை அவளது தோழனாகவோ இல்லை காதலனாகவோ நினைத்து பார்க்கும் விரோத பார்வையும், “கொடுத்த வச்சவன்டா நீ” என்ற ரீதியில் கடந்து போவதும் மெல்ல ஒரு குறுகுறுப்பை உணரத்தான் செய்தது.
“எஸ்க்யூஸ் மீ” என அவள் தான் பேச்சை தொடங்கினாள்
“எஸ்” என்றேன்
“ஐ அம் நீரஜா”
“ஐ அம் ராஜேஷ்” என பரஸ்பரம் அறிமுக படுத்தி கொண்டோம்.
என்ன படிக்கறீங்க? என்றாள்,
“தி வீக் இதழ்” என்றேன்,
ஒ!, நான் அதை கேட்கவில்லை, எந்த காலேஜ்” என்றாள்,
“ஐ அம் என் எம்ப்லாயி”, என நான் வேலை செய்யும் அலுவலக பெயர் சொன்னேன், நம்பாமல் , டிக்கெட் கொடுங்க, உங்க வயசு என்ன? என்றாள்,
பர்சிலிருந்த டிக்கெட் ஐ கொடுத்த உடன் பார்த்து விட்டு, யு லுக் சோ எங்!! என்றாள். டிக்கெட் ஐ வாங்கி என் மேல் பாக்கெட்டில் வைத்து கொண்டேன்.
அதன் பின் எங்களின் ஐந்து நிமிட உரையாடலை நீங்கள் கேட்டிருந்தால் , நாங்கள் இருவரும் கோவை போவதும், அந்த புத்தக கடையில் அவள் கேட்ட புத்தகம் இல்லாததும், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என அவளிடம் சொன்ன 16வது ஆள் நான் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
படிக்க எதாவது நல்ல சுவாரசியமான புத்தகம் இருகிறதா என்றாள், குனிந்து என்னுடைய பையில் புத்தகத்தை துழாவி கொண்டு இருந்தேன், அப்போதும் ஓர பார்வையில் அவள் என்னை பார்க்கிராளா என்பதை பார்க்க தவறவில்லை.
கடைசியில் ஒரு புத்தகம் எடுத்து கொடுத்த உடன்,
“தேங்க்ஸ், நானே வச்சுகிட்டமா? என சிரித்து கொண்டே கேட்டாள், அந்த சிரிப்புடன் அவள் கேட்டால் சொத்தையே எழுதி தந்து இருப்பேன். புத்தகம் தானே என “அன்புடன் ராஜேஷ்” என கை எழுத்து இட்டு போன் நம்பர் எழுதி கொடுத்தேன்.
நேரம் ஆகி விட பிளாட்பார்ம் நோக்கி நடக்க தொடங்கினோம், நீங்கள் எந்த கோச் என்றாள் S2 என்றேன், நான் S11 என்றாள்.
“பார்க்கலாம்” என்று சொல்லி சென்று விட்டாள்,
எப்போ? என கேக்க நினைத்து நிறுத்தி கொண்டேன்.
வண்டி நகர துவங்கியது, பரிசோதகரிடம் டிக்கெட் ஐ கொடுத்து பரிசோதனை முடித்து படுக்க போகும் முன், என் பேண்ட் பாக்கெட் ஐ தொட்டு பார்த்தேன். ”என் பர்சை காணவில்லை”.
புத்தக கடையில் இருந்தது, அவளிடம் டிக்கெட் எடுத்த காட்டும் போது இருந்தது. ஒருவேளை அவள்???,
புத்தக கடையில் பார்த்து, லாவகமாக பேசி பர்சை எடுக்க வைத்து, டிக்கெட் ஐ நான் மேல் பாக்கெட்டில் வைத்து. குனிந்து புத்தகம் எடுக்கையில் .
ச்சே ச்சே இருக்காது!!
அதற்குள் வண்டி அடுத்த ஸ்டேஷனில் நின்றது - நிற்க!!
நான் S11 கோச்சிற்கு போய் பார்க்கவா வேண்டாமா?
Saturday, April 25, 2009
Thursday, April 16, 2009
சித்திரை திங்கள் அல்லது தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்
இந்த வருடத்தில் இருந்து தை முதல் நாள் தான் தமிழ் வருட பிறப்பு என கலைஞர் அறிவித்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். இப்படி எல்லாம் சட்டுன்னு மாத்திடலாமா என்று தெரியவில்லை. முன்பு ஒரு முறை க்ரிகாரியன் நாட்காட்டி (Gregorian calendar) முறையில் ஒரு குழப்பம் வந்தபோது வாட்டிகனில் இருந்து போப் 14 நாட்களை தள்ளி வைத்தார் என படித்து உள்ளேன்.
எது எப்படியோ நம்ம டி.வி சேனல்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி போட்டே ஆகனும்னு தீர்மானிச்சிட்ட பிறகு ஒவ்வொரு டி.வி யும் அவங்க அவங்க ஒரு பேர் வச்சு போட்டுடாங்க. சன் பிறந்த நாள் கொண்டாட்டம் என, ஜெயா தமிழ் வருட பிறப்பு என, மற்றவை (கலைஞர் உட்பட) சித்திரை திங்கள் முதல் நாள் என. வருஷம் எப்படி மாறுனா என்ன, எங்கள என்ன பண்ணுவீங்க? என அதே சாலமன் பாப்பையா, நடிக நடிகைகள் பேட்டி என வாரி இறைத்து விட்டனர்.
எங்க அக்கா பையன் (5 வயசு) என்னோடு உட்கார்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்துட்டு, மேட்ச் முடிஞ்ச உடனே சொன்னான், ”மாமா, என் வாழ்க்கைய்ல இந்த மாதிரி மாட்சே பார்த்ததில்லைனு” அந்த மாதிரி ஒரு படம் இரண்டு படம் நடிச்சவங்கலாம் வந்து தன் திரை உலக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகிட்டாங்க. ஆசை ஆசையாய் உட்கார்ந்து பார்த்தது ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி, விவேக் சில நல்ல கேள்விகள் கேட்டார். ரஹ்மான் சொன்ன சில விஷயங்கள் அழகாக இருந்தது.
1. ஏ.ஆர்.ரஹ்மானின் சிறு வயதில் அவர் தந்தை இறந்த பின், அவரது வாத்திய கருவிகளை எல்லாம் வித்தா நல்ல காசு வரும் என்று உறவினர்கள் சொல்கையில், ரஹ்மானின் அம்மா, “வேண்டாம் வேண்டாம் அது எல்லாம் இவன் பெரியவனாகி வாசிப்பான்” என்றாராம்.
2.எம்.எஸ். வியை சங்கமம் படத்தில் பாட வைத்ததை பற்றி கூறுகையில் “அவர் குரலில் ஆன்மா இருக்கிறது என்றார்.
3.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வசீகரா” பாடலும், தேவா இசையில் “கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடலும் பிடிக்கும் என்றார்.
4.வைரமுத்து நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்றார்.
மாலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வைரமுத்துவின் பாடல்களை எஸ். பி. பி யும் சித்ராவும் பாடினார்கள். ஒவ்வொரு பாடலுக்கும் முன்பும் அந்த பாடலினை அறிமுகப்படுத்தி உணர்ச்சி பொங்க பேசினார் வைரமுத்து. ஒரு பாடலை பற்றி சொல்கையில், இந்த பாடலுக்கு இசை அமைத்து விட்டு இளையராஜா அழுதார், வரிகளுடன் பாடலை கேட்ட பாரதிராஜா அழுதார், பாடலை பாடி முடித்த பின் எஸ். பி. பி அழுதார், உதவி இசை கலைஞர்கள் எல்லாம் அழுதனர். படம் வெளி வந்தது படத்தை வாங்கிய Distributor எல்லாம் அழுதனர், படம் ப்ளாப் என்றார்!!.
பாடல் - சங்கீத ஜாதி முல்லை
படம் - காதல் ஓவியம்
“ராமன் தேடிய சீதை” படம் பாத்தேன். இந்த படம் ஓடி இருக்கலாமோ என தோன்றியது. தெளிவான கதை, தடையில்லா திரைகதை. சில நாடக பாணி வசனங்களையும், கட்சிகளையும் தவிர்த்திருக்கலாமோ எனப்பட்டது. மேலும் சேரன் எல்லா காட்சியிலும் அழுவது போலவே பேசுகிறார். இறுதி காட்சிகளில், “பாவம் யாராவது இவருக்கு பொண்ணு குடுங்கப்பா” என சொல்லும் அளவு பரிதாபமாய் இருக்கிறார். கடைசியில் “மாயக்கண்ணாடி” நவ்யா நாயர் வருகிறார், விட்டால் “ஆட்டோகிராப்” மல்லிகா, இல்லை “பொற்காலம்” மீனா வரை சென்று விடுவாரா என நினைக்கையில் படம் சுபம்.
எது எப்படியோ நம்ம டி.வி சேனல்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி போட்டே ஆகனும்னு தீர்மானிச்சிட்ட பிறகு ஒவ்வொரு டி.வி யும் அவங்க அவங்க ஒரு பேர் வச்சு போட்டுடாங்க. சன் பிறந்த நாள் கொண்டாட்டம் என, ஜெயா தமிழ் வருட பிறப்பு என, மற்றவை (கலைஞர் உட்பட) சித்திரை திங்கள் முதல் நாள் என. வருஷம் எப்படி மாறுனா என்ன, எங்கள என்ன பண்ணுவீங்க? என அதே சாலமன் பாப்பையா, நடிக நடிகைகள் பேட்டி என வாரி இறைத்து விட்டனர்.
எங்க அக்கா பையன் (5 வயசு) என்னோடு உட்கார்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்துட்டு, மேட்ச் முடிஞ்ச உடனே சொன்னான், ”மாமா, என் வாழ்க்கைய்ல இந்த மாதிரி மாட்சே பார்த்ததில்லைனு” அந்த மாதிரி ஒரு படம் இரண்டு படம் நடிச்சவங்கலாம் வந்து தன் திரை உலக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகிட்டாங்க. ஆசை ஆசையாய் உட்கார்ந்து பார்த்தது ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி, விவேக் சில நல்ல கேள்விகள் கேட்டார். ரஹ்மான் சொன்ன சில விஷயங்கள் அழகாக இருந்தது.
1. ஏ.ஆர்.ரஹ்மானின் சிறு வயதில் அவர் தந்தை இறந்த பின், அவரது வாத்திய கருவிகளை எல்லாம் வித்தா நல்ல காசு வரும் என்று உறவினர்கள் சொல்கையில், ரஹ்மானின் அம்மா, “வேண்டாம் வேண்டாம் அது எல்லாம் இவன் பெரியவனாகி வாசிப்பான்” என்றாராம்.
2.எம்.எஸ். வியை சங்கமம் படத்தில் பாட வைத்ததை பற்றி கூறுகையில் “அவர் குரலில் ஆன்மா இருக்கிறது என்றார்.
3.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வசீகரா” பாடலும், தேவா இசையில் “கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடலும் பிடிக்கும் என்றார்.
4.வைரமுத்து நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்றார்.
மாலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வைரமுத்துவின் பாடல்களை எஸ். பி. பி யும் சித்ராவும் பாடினார்கள். ஒவ்வொரு பாடலுக்கும் முன்பும் அந்த பாடலினை அறிமுகப்படுத்தி உணர்ச்சி பொங்க பேசினார் வைரமுத்து. ஒரு பாடலை பற்றி சொல்கையில், இந்த பாடலுக்கு இசை அமைத்து விட்டு இளையராஜா அழுதார், வரிகளுடன் பாடலை கேட்ட பாரதிராஜா அழுதார், பாடலை பாடி முடித்த பின் எஸ். பி. பி அழுதார், உதவி இசை கலைஞர்கள் எல்லாம் அழுதனர். படம் வெளி வந்தது படத்தை வாங்கிய Distributor எல்லாம் அழுதனர், படம் ப்ளாப் என்றார்!!.
பாடல் - சங்கீத ஜாதி முல்லை
படம் - காதல் ஓவியம்
“ராமன் தேடிய சீதை” படம் பாத்தேன். இந்த படம் ஓடி இருக்கலாமோ என தோன்றியது. தெளிவான கதை, தடையில்லா திரைகதை. சில நாடக பாணி வசனங்களையும், கட்சிகளையும் தவிர்த்திருக்கலாமோ எனப்பட்டது. மேலும் சேரன் எல்லா காட்சியிலும் அழுவது போலவே பேசுகிறார். இறுதி காட்சிகளில், “பாவம் யாராவது இவருக்கு பொண்ணு குடுங்கப்பா” என சொல்லும் அளவு பரிதாபமாய் இருக்கிறார். கடைசியில் “மாயக்கண்ணாடி” நவ்யா நாயர் வருகிறார், விட்டால் “ஆட்டோகிராப்” மல்லிகா, இல்லை “பொற்காலம்” மீனா வரை சென்று விடுவாரா என நினைக்கையில் படம் சுபம்.
Subscribe to:
Posts (Atom)