Sunday, July 11, 2010

இது கல்யாண காலமடி சகியே!

கடந்து ஒரு மாதத்திற்குள் மூன்று கல்யாண செய்திகளை கேட்டு விட்டேன் எனது நெருக்கமான நண்பர்களிடம் இருந்து. இன்னும் ஒருவனுக்கு இப்பவோ அப்பவோ என இழுத்து கொண்டு இருக்கிறது. போன மாதம் வரை, "நான் அவன மாதிரி எல்லாம் தோலுக்கு ஆசை படல, எனக்குன்னு ஒரு ஆளுக்குதான் ஆசைபடறேன்" என வசனம் பேசி கொண்டு இருந்தவன் தான் மிக உற்சாகமாக தொலைபேசி ஆகஸ்ட்லயே கல்யாணம் டா என்றான். காதலை சொல்லிவிட்டேன் என உற்சாகமாக வந்து சொல்லிய நண்பர்கள் கல்யாண செய்தியும் (அதே பெண்ணுடன்தான்!) சொல்வது உற்சாகம் அளிப்பதாக உள்ளது. கல்யாண செய்தி கேட்பது இது ஒன்றும் புதுசு இல்லை, பள்ளி, கல்லூரி காலம் தொட்டே கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவை எல்லாம், பின்னணி இசையால் சொத்தப்பபட்ட நல்ல காட்சி போல பொலிவு இழந்து தான் நெஞ்சில் நிற்கிறது. இப்போதுதான் ராஜாவின் பின்னணியோடு கனகட்சிதமாய் பொருந்தி வருகிறது.

மென்பொருள் அலுவலகத்தில் வேலைக்கு சேர்வதின் ஒரு மிகபெரிய உபாயம் சம வயதினருடன் பழகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பது. அப்படி சேர்ந்துதான் ஐந்து பேர் கொண்ட குழு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நமது மூதாதையாரை மதித்து நாங்களும் ஒரு சங்கம் அமைத்தோம், FKSS – Figure Kidaikaamal Samaalipor Sangam என.அப்படி சேர்ந்த ஐந்து விரலில் இருந்து தான் ஒரு மூன்று விரல் மோதிரம் மாட்டி கொண்டது. பல நட்புகள் தி.மு தி.பி என வகை பிரிக்கும் அளவுக்கு மாறி விட வாய்ப்பிருந்தாலும் இப்போதைக்கு சந்தோஷமாய் வாழ்த்தத்தான் முடிகிறது.

நான் நல்லா பாடுவேன் மிஸ், என்னையும் ஆண்டு விழாவில் சேர்த்துகோங்க என கேட்ட அமுதா மூன்று மாதத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகூட எழுதாமல் போனதற்கு காரணம் கல்யாணம்தான் என்ற போதோ, என் கூட எல்லாத்துக்கும் சண்டை போட்டு கொண்டு இருந்த அக்காவை வீட்டிலிருந்து பிரித்து வீட்டையே வெறிசோட செய்தது திருமணம் தான் என்ற போதோ எனக்கு வெறுப்பு தான் வந்தது. மாமாவோடு சினிமாவிற்கு போனதோ, இல்லை ஐந்து வருடத்தில் அக்கா பெண் ஆசையோடு மடியில் ஏறி விளையடியபோதோ அந்த வெறுப்பு மறைந்திருக்க வேண்டும். அமுதாவும் வீட்டில் பசங்களுக்கு பாட்டு சொல்லி கொடுப்பாள் என நினைத்து சமாதானம் செய்து கொள்கிறேன்.

காதலில் உள்ள நிச்சயமின்மை தரும் அச்சம் கலந்த சந்தோஷம் ஒரு விதம் என்றால், நிச்சயமான கல்யாணம் வேறு விதமான துள்ளல். கல்லூரியில் ஒரு வருடம் யாருடன் அறையை பகிர்ந்து கொள்ள போகிறோம் என்ற எதிர்ப்பார்பே மிகுந்த அச்சம் ஊட்டுவதாக இருந்ததை நினைத்து பார்கிறேன். கல்யாணம் வார நாட்களில் வந்தால் பள்ளிக்கு "கட்", சென்னையில் உள்ள மாமா பையன் கல்யாணத்துக்கு வருவான், பொங்கல் வடை கிடைக்கும் என சின்ன சின்ன விஷயத்திற்கு சந்தோஷபட்டு கொள்ளும் பிள்ளை குணம் இருக்கும் வரையில் இருந்த மகிழ்ச்சி வேறுவகை. அக்கா திருமணதிற்கு வந்துவிட்டு, தங்கும் அறையில் ஏ.சி இல்லை என்ற சண்டை வாங்கிய அந்த மனிதரின் முகம், ஓடி ஓடி கலைத்து வராண்டாவில் தலையணை கூட இல்லாமல் படித்திருந்த ஏன் நெஞ்சில் ஆழ பதிந்திருக்கிறது.

நிறம் சற்று கருப்பு என திருமணம் தள்ளி போய் கொண்டிருந்த தோழிக்கு, அவர் குணத்திற்கு ஏற்றார் போல நடந்த கல்யாணமும் எப்போதும் மறக்க முடியாதது. அதற்கு முன் அவர் அனுபவித்த வலிகளையெல்லாம் அடித்து கொண்டு போன அந்த சிரிப்பை அன்றுதான் அவர் முகத்தில் கண்டேன். அப்படி கல்யாணம் நிச்சயமான எனது நண்பனது தோழியை பற்றிதான் மாறுதல் கதையில் எழுதி இருந்தேன். எல்லா கல்யாணத்திற்கு பின்னும் ஏதேனும் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அலுவலகத்தில் என்னை விட இரண்டு வருட ஜூனியர் ஒருவன் புதிதாய் சேர்ந்திருந்தான், மிகவும் அமைதியானவன்.. பழக ஆரமித்த கொஞ்ச நாளைக்குள்ளாகவே நெருக்கமானான். எங்கள் சங்கத்தில் சேர்ந்து கொள்ள அவன் அவசரம் காட்டினாலும் அவனை நிலுவையிலேயே வைத்து கொண்டு இருந்தோம். எப்போதும் போல ஒரு தேனீர் இடைவெளியில் அமைதியாக நாங்கள் பேசுவதையே கேட்டு கொண்டு இருந்தான்.

எப்போதும் போல, எங்கள் சங்கம் எப்படி வளர்ச்சி பாதையில் போய் கொண்டு இருக்கிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை என்ன என்பது போன்ற திட்டக்குழு விவாதங்கள் அரங்கேறி கொண்டு இருந்தன.

அரை மணி நேரம் ஆனா பின், எல்லாரும் அவரவர் மீசையை துடைத்து கொண்டு கிளம்ப ஆயத்தமானோம். அவன்,

"சார், உங்க எல்லார்டையும் ஒரு விஷயம் சொல்லணும் ?"

"என்னடா?"

"எனக்கு அடுத்த மாசம் கல்யாணம்"

"ஏண்டா, எதாவது காதல் விவகாராமா, வீட்டுக்கு தெரியாமையா?"

"இல்லை சார், வீட்ல பார்த்ததுதான்"

"அப்புறம் ஏன், உனக்கு 23 தானே ஆகுது?. ஏன் அவசரப்ற நல்ல பொண்ணா கிடைக்கும்டா" என்றேன்.

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, "எங்க அம்மா பார்த்ததே ரொம்ப நல்ல Figure சார்"
என சொன்னதோடு நிற்காமல். இப்போ விட்டுட்டு, அப்புறம் சங்கம்லாம் வச்சு போராட முடியாது என்றான். மீசையை சற்று அழுத்தி துடைத்து கொண்டு கிளம்பினோம்.

12 comments:

  1. nice presentation.



    http://vaarththai.wordpress.com

    ReplyDelete
  2. Guess it's time to inform your parents;).. Nice Narration, Madhan.

    By the way Who's that Junior?

    ReplyDelete
  3. Thanks and welcome Soundr!

    Welcome Anu and thanks a lot!

    ReplyDelete
  4. ThkQ Ajee!

    Yeah yeah i told them.... "Enga ne Kekkaraangaa?" ;)

    He is Vinoth, he was in Billing team once.

    ReplyDelete
  5. Nice na... I always likes the way u r making incidents into story.. Hats off :)

    ReplyDelete
  6. Thanks Bala... Yeah Yeah i always have that capability and u experienced it a lot illayaa? :P

    ReplyDelete
  7. kalakuringa Madhan !!! Eppo Unga Kalyana News ?

    ReplyDelete
  8. நன்றி முத்து..:)
    இந்த சின்ன வயசுல எனக்கு எதுக்குங்க அதெல்லாம் :P

    ReplyDelete