Saturday, April 4, 2009

சிறு சிறு கதைகள் - ஒரு புது முயற்சி

தமிழ் சிறு கதை உலகில் பல மாற்றங்களை கொண்டு வந்த சுஜாதா முயன்று பார்த்த வித்யாசமான சிறு கதை முயற்சி இது. இரு வரி கதை. அதிலும் விஞ்ஞான சிறு சிறு கதைகளில் தமிழ் உலகின் முன்னோடி முயற்சி அவருடையது. இதில் அவர் மொழிபெயர்த்த சில கதைகளை கொடுத்து உள்ளேன். முதல் முயற்சியாக நானே சில கதைகளை மொழி பெயர்த்து உள்ளேன்.


1. தலைப்பு : கரடி வேஷம் போட்டவனின் கடைசி வார்த்தைகள்

கதை : “ஐயோ சுட்டுடாதே!”


2. தலைப்பு : ஆராய்ச்சி சாலையில் இருந்து ரோபோ வெளியே வந்தது

கதை : “டாக்டர் க்ளோஸ்”


3. தலைப்பு : மகன் தந்தைகாற்றும்…..

கதை : “இ.மெயில்”


4. தலைப்பு : என்னை யாரோ பார்க்கிறார்கள்

கதை : கண்ணாடி

இனி எனது மொழிபெயர்ப்பு முயற்சிகள்…..


5. தலைப்பு : விண்வெளியின் கருந்துளையை (Black Hole) அடைய போகையில்

கதை : நான் கருந்துளையை அடைந்து விட்……….


6. தலைப்பு : கனவுகளின் ஆரம்பம்

கதை: கடவுளே!! என் எல்லா கனவுகளும் பலிக்க வேண்டும்!!!

எனது இரு வரி முயற்சிகள்


7. தலைப்பு : பொருளாதார பின்னகர்வு (நன்றி Meenaks!!)

கதை: நாளைக்கு சரியாகிடும்…… நாளைக்கு……..நாளைக்கு


8. தலைப்பு : பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்

கதை: 49 O


9. தலைப்பு : அக்காவிற்கு வந்த மாப்பிள்ளை புகைப்படத்தை பார்த்த தங்கை

கதை: அவருக்கு தம்பி இருகாறா?


பொதுவாக இரு வரி கதைகள் போல, இரு வார்த்தை கதைகளும் உள்ளது. ஆனால் முதல் முயற்சி என்பதால் நாம் இரு வரிகளையே முயன்று பார்போம். இரு வரி தானே என்பதற்க்காக, டவுசர் தைய்ங்க ஆனா நீளம் கால் வரைக்கும் என வடிவேலு ரேஞ்சுக்கு நீட்டாமல், சிறிய வாக்கியங்களை உபயோகபடுத்தி இப்பதிவிற்கு பின்னூட்டமாக அளிக்கலாம்.

No comments:

Post a Comment