Thursday, April 16, 2009

சித்திரை திங்கள் அல்லது தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

இந்த வருடத்தில் இருந்து தை முதல் நாள் தான் தமிழ் வருட பிறப்பு என கலைஞர் அறிவித்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். இப்படி எல்லாம் சட்டுன்னு மாத்திடலாமா என்று தெரியவில்லை. முன்பு ஒரு முறை க்ரிகாரியன் நாட்காட்டி (Gregorian calendar) முறையில் ஒரு குழப்பம் வந்தபோது வாட்டிகனில் இருந்து போப் 14 நாட்களை தள்ளி வைத்தார் என படித்து உள்ளேன்.


எது எப்படியோ நம்ம டி.வி சேனல்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சி போட்டே ஆகனும்னு தீர்மானிச்சிட்ட பிறகு ஒவ்வொரு டி.வி யும் அவங்க அவங்க ஒரு பேர் வச்சு போட்டுடாங்க. சன் பிறந்த நாள் கொண்டாட்டம் என, ஜெயா தமிழ் வருட பிறப்பு என, மற்றவை (கலைஞர் உட்பட) சித்திரை திங்கள் முதல் நாள் என. வருஷம் எப்படி மாறுனா என்ன, எங்கள என்ன பண்ணுவீங்க? என அதே சாலமன் பாப்பையா, நடிக நடிகைகள் பேட்டி என வாரி இறைத்து விட்டனர்.


எங்க அக்கா பையன் (5 வயசு) என்னோடு உட்கார்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச் பார்த்துட்டு, மேட்ச் முடிஞ்ச உடனே சொன்னான், ”மாமா, என் வாழ்க்கைய்ல இந்த மாதிரி மாட்சே பார்த்ததில்லைனு” அந்த மாதிரி ஒரு படம் இரண்டு படம் நடிச்சவங்கலாம் வந்து தன் திரை உலக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகிட்டாங்க. ஆசை ஆசையாய் உட்கார்ந்து பார்த்தது ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி, விவேக் சில நல்ல கேள்விகள் கேட்டார். ரஹ்மான் சொன்ன சில விஷயங்கள் அழகாக இருந்தது.


1. ஏ.ஆர்.ரஹ்மானின் சிறு வயதில் அவர் தந்தை இறந்த பின், அவரது வாத்திய கருவிகளை எல்லாம் வித்தா நல்ல காசு வரும் என்று உறவினர்கள் சொல்கையில், ரஹ்மானின் அம்மா, “வேண்டாம் வேண்டாம் அது எல்லாம் இவன் பெரியவனாகி வாசிப்பான்” என்றாராம்.


2.எம்.எஸ். வியை சங்கமம் படத்தில் பாட வைத்ததை பற்றி கூறுகையில் “அவர் குரலில் ஆன்மா இருக்கிறது என்றார்.


3.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “வசீகரா” பாடலும், தேவா இசையில் “கொஞ்ச நாள் பொறு தலைவா” பாடலும் பிடிக்கும் என்றார்.


4.வைரமுத்து நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்றார்.


மாலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வைரமுத்துவின் பாடல்களை எஸ். பி. பி யும் சித்ராவும் பாடினார்கள். ஒவ்வொரு பாடலுக்கும் முன்பும் அந்த பாடலினை அறிமுகப்படுத்தி உணர்ச்சி பொங்க பேசினார் வைரமுத்து. ஒரு பாடலை பற்றி சொல்கையில், இந்த பாடலுக்கு இசை அமைத்து விட்டு இளையராஜா அழுதார், வரிகளுடன் பாடலை கேட்ட பாரதிராஜா அழுதார், பாடலை பாடி முடித்த பின் எஸ். பி. பி அழுதார், உதவி இசை கலைஞர்கள் எல்லாம் அழுதனர். படம் வெளி வந்தது படத்தை வாங்கிய Distributor எல்லாம் அழுதனர், படம் ப்ளாப் என்றார்!!.

பாடல் - சங்கீத ஜாதி முல்லை

படம் - காதல் ஓவியம்


“ராமன் தேடிய சீதை” படம் பாத்தேன். இந்த படம் ஓடி இருக்கலாமோ என தோன்றியது. தெளிவான கதை, தடையில்லா திரைகதை. சில நாடக பாணி வசனங்களையும், கட்சிகளையும் தவிர்த்திருக்கலாமோ எனப்பட்டது. மேலும் சேரன் எல்லா காட்சியிலும் அழுவது போலவே பேசுகிறார். இறுதி காட்சிகளில், “பாவம் யாராவது இவருக்கு பொண்ணு குடுங்கப்பா” என சொல்லும் அளவு பரிதாபமாய் இருக்கிறார். கடைசியில் “மாயக்கண்ணாடி” நவ்யா நாயர் வருகிறார், விட்டால் “ஆட்டோகிராப்” மல்லிகா, இல்லை “பொற்காலம்” மீனா வரை சென்று விடுவாரா என நினைக்கையில் படம் சுபம்.

3 comments:

  1. sometimes, vijay tv is showing good shows like Sivakumar’s Kamban En Kadhalan and Neeya Naana

    more comments on Neeya Naana is expected :)

    ReplyDelete
  2. yes vijay tv programmes r nice krishna, i do watched that...

    ReplyDelete
  3. why dont u participate in Neeya Naana .. esp in tamil issues..

    ReplyDelete