Tuesday, June 16, 2009

குறும்பாடல்கள்-2

தொடர்ந்து பதிவுகள் போட விஷயம் சிக்கலையே என்று நினைத்த படிய என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கையில் கண நேரத்தில் உதயம் ஆனது இந்த யோசனை. ஏற்கனவே ஆரம்பித்து விடப்பட்டுள்ள பதிவுகளை தொடரலாமே என்று.


இந்த குறும்பாடல்களின் சிறப்பு இதை கதையோட ஒட்டியப்படிதான் சொல்லவேண்டும் என்பதே, மற்ற பாடல்களை போல இடை சொருகளாய் இவ்வகைப் பாடல்களை வைக்க முடிவதில்லை. பல நல்ல இயக்குனர்களின் அல்லது வெற்றி பெற்ற படங்களில் தான் இந்த குறும்படல்கள் அதிகம் காண படுகிறது, அது அந்த இயக்குனரின் திறனையும் பிரதிப்பளிப்பதாக உள்ளது. உதாரணமாக, மணிரத்னம் “நாயகனில்” ஆரம்பித்தார், அதன் பின் ஷங்கர் சில படங்களில் அனுமதித்தார், இப்போது செல்வராகவன் பயன்படுத்துகிறார்.


காதலனில் வரும் “கொல்லையில தென்னைக் கட்டி குருதோளில் பெட்டி செஞ்சு, சீனி போட்டு நீ திங்க செல்லமாய் பிறந்தவளோ” பாடலும், அதை ஒட்டிய காட்சிகளும் கவிதை. ஷங்கர் முதலில் ஒரு மென்மையான கதை வைத்து கொண்டு தான் படம் எடுக்க அலைந்து கொண்டிருந்தாராம். கடைசியில் ஜென்டில்மேன் எடுத்தார், அப்புறம் ஒன்னும் சொல்வதற்க்கில்லை.


இந்த சிறுபாடல்கள் வளர்ச்சி அடைந்த பிறகு, கதாநாயகன் நாயகியிடம் கவிதை சொல்வது குறைந்து போனதோ என்ற எண்ணம் உண்டு. இதயம் படத்தில் வரும் சில கவிதைகள் அழகானது, அதற்கு பின் வந்த பல படங்களில் இப்படி கவிதை சொல்வது ஒரு வகை Mockery போல் ஆகிவிட்டது, இதயம் படத்திற்கு பின் நீண்ட நாள் கழித்து டூயட் படத்தில், வரும் வைரமுத்துவின் “கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா, என் காலோடு கேட்கின்ற கால் சலங்கை நீயா?” கவிதை மிக சிறப்பாய் அமைந்தது.


ஆனால் அதே வைரமுத்துவின் “காதலித்து பார்” கவிதையை பிரசாந்த் ஒரு படத்தில் அவருக்கு வரவே வராத நடிப்பை கஷ்டப்பட்டு முகத்தில் வர வைக்க முயற்சி பண்ணி சொதப்பினார். அப்புறம் விவேக், “காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு, சைஸ் சரியா இருந்த யார் வேணும் நாலும் மாட்டிக்கலாம்” போல எழுத ஆரம்பித்த உடன் தான், இயக்குனர்கள் முழு வேகமாய் குட்டி குட்டி பாடல்களுக்கே போகலாம் என இறங்கி இருப்பார்கள் போல.


இதோ பிடித்த சிறு பாடல்கள் வரிசையில் அடுத்து, ஜீன்ஸ் படத்தில் வரும் இந்த பாடல் ஹரிஹரன் குரலில் மிக அழகானது, பிரிவின் துயர் ததும்பும் இந்த பாடல் “திருடா திருடா” படத்தின் “ராசாத்தி என் உசுரு எனதில்லே” பாடல் அளவுக்கு பிரிவின் துயர் பாடியது.


பாடல்: புன்னகையில் தீ மூட்டி


இசை: ஏ.ஆர்.ரஹ்மான்


வரிகள்: வைரமுத்து


ஏலே……லே ஏலேலே ஏலே…..லே


புன்னகையில் தீ மூட்டி போனவளே,


கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே,


அன்பே என் பூமியே புல் ஆனதே


அய்யோ என் காற்றெல்லாம் நஞ்சானதே….


என் உயிரே என் தேகம் தின்னாதே


என் விழியே முகம் தாண்டி செல்லாதே


ஏலே……லே ஏலேலே ஏலே…..லே


அன்பே மெய் என்பதே பொய் ஆகினால்


அய்யோ பொய் என்பது என் ஆகுமோ


உயிர் காதல் உயிர் வாங்குமோ ….


இதே போல், பிரிவை கவிதைப்படுத்திய மற்றொரு பாடல், “காதல் கொண்டேன்‘ படத்தில் வரும் நா. முத்துகுமாரின் “நட்பினிலே நட்பினிலே பிரிவு என்பது ஏதுமில்லை”. இவரது வரிகளில் வரும் பல பாடல்கள் மிக அழகாக உள்ளது, பூ வாழ சொல்லியது, கனி பாட சொல்லியது போன்ற நைந்து போன வார்த்தைகளை வைத்து ஜல்லி அடிக்காமல் பல நல்ல வரிகளை தொடர்ந்து எழுதி வருகிறார். கல்லூரி படத்தின் “உன்னருகில் வருகையில்” மற்றும் “சரியா இது தவறா” பாடலிலும் அழகான வரிகளுடன் இசை கலந்து வருவது மென்மை.

2 comments:

  1. I'm now asking you a common doubt of,

    how to upload a audio or video file in google blog.

    can u guide me please.

    ReplyDelete
  2. Mostly ppl used to give links of Youtube for Videos and some Tamil music website for audios. So u better upload u r video on Youtube first, then provide that link in u r blog. Hope that help u!!

    ReplyDelete