அவ்வளவுதானா?
உன் கோவம், உன் சிணுங்கல்
உன் வெட்கம், உன் புன்னகை
உன் உதட்டு சுழிப்பு
அத்தனையும் உள்ளங்கையில் சேர்த்து
கொடுத்தேன்
பிரித்து பார்த்து
சீ, போ! என்கிறாயே
0
அவகாசம் இல்லை
அச்சம், தன்மானம்
இன்னபிற ஆகியவற்றை
ஒதுக்கிவிட்டு சற்றே செவிகொடு
மௌனத்தையே இவ்வளவு நேரம்
பேசி கொண்டு இருந்தால்
காதலை எப்போது பேசுவது?
0
கடவுச்சொல்
உனது பெயரை மட்டும்
கைபேசியில் செல்லப் பெயர்
வைத்து மாற்றி கொண்ட அன்றோ,
உனது மின்னஞ்சல்களை மட்டும்
தனியான அறையில் சேமிக்க
தொடங்கிய அன்றோ ,
உன்னை காதலிக்க
தொடங்கி இருக்க வேண்டும்!
வேறு ஒருவனை மணந்து எனது
மின்னஞ்சல் முகவரியின் பாஸ்வார்டாய்
மாறும் முன் சொல்லிவிட வேண்டும் என் பிரியத்தை…
0
நீயே சொல்
அடித்து, திருத்தி
கணினியை பார்த்தவாரே அமர்ந்து
ச்சே…
நீ என்னை
இப்படியே பார்த்து கொண்டே இருந்தால்
நான் எப்படி கவிதை எழுதுவது?
------------------------------------------------------------------------------------
கவிதைகளை படித்து விட்டு நண்பர் கொடுத்த பின்னூடமும் சுவையாய் இருந்ததால், அதுவும் இங்கே..
இந்த கவிதைலாம் படிச்ச அப்புறம் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் மனசுல தோனுச்சு.
யார் சார் அந்த ஃபிகரு?
Enkeruthu vantha kavithaigal ivai ?
ReplyDeleteUn eluthu kollil iruntha illai un nenjil iruntha :-)
Athuvaaa Varuthu.. Ithukku ellam kaaranam solla mudiyumaa pa! :)
ReplyDeleteunmai oru nall velli vanthae theerum
ReplyDelete