Friday, February 12, 2010

சொல்லாமல் விட்டவை - சில காதல் கவிதைகள்

பதிவுகள் எழுதி நீண்ட நாட்களான பிறகு, காதலர் தினத்தை ஒட்டி விருந்தினர் பதிவு கேட்டு நண்பர்கள் அரவிந்தனும், அய்யப்பராஜும் கேட்டிருந்தார்கள். ஆதலினாலை தொடர்ந்து சில குட்டி காதல் கவிதைகள், எப்போதோ கோர்த்த கணங்களை சேர்த்து...

அவ்வளவுதானா?

உன் கோவம், உன் சிணுங்கல்
உன் வெட்கம், உன் புன்னகை
உன் உதட்டு சுழிப்பு
அத்தனையும் உள்ளங்கையில் சேர்த்து
கொடுத்தேன்

பிரித்து பார்த்து
சீ, போ! என்கிறாயே
0

அவகாசம் இல்லை

அச்சம், தன்மானம்
இன்னபிற ஆகியவற்றை
ஒதுக்கிவிட்டு சற்றே செவிகொடு

மௌனத்தையே இவ்வளவு நேரம்
பேசி கொண்டு இருந்தால்
காதலை எப்போது பேசுவது?
0

கடவுச்சொல்

உனது பெயரை மட்டும்
கைபேசியில் செல்லப் பெயர்
வைத்து மாற்றி கொண்ட அன்றோ,

உனது மின்னஞ்சல்களை மட்டும்
தனியான அறையில் சேமிக்க
தொடங்கிய அன்றோ ,

உன்னை காதலிக்க
தொடங்கி இருக்க வேண்டும்!

வேறு ஒருவனை மணந்து எனது
மின்னஞ்சல் முகவரியின் பாஸ்வார்டாய்
மாறும் முன் சொல்லிவிட வேண்டும் என் பிரியத்தை…
0

நீயே சொல்

அடித்து, திருத்தி
கணினியை பார்த்தவாரே அமர்ந்து
ச்சே…

நீ என்னை
இப்படியே பார்த்து கொண்டே இருந்தால்
நான் எப்படி கவிதை எழுதுவது?

------------------------------------------------------------------------------------

கவிதைகளை படித்து விட்டு நண்பர் கொடுத்த பின்னூடமும் சுவையாய் இருந்ததால், அதுவும் இங்கே..

இந்த கவிதைலாம் படிச்ச அப்புறம் எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் மனசுல தோனுச்சு.
யார் சார் அந்த ஃபிகரு?


3 comments:

  1. Enkeruthu vantha kavithaigal ivai ?

    Un eluthu kollil iruntha illai un nenjil iruntha :-)

    ReplyDelete
  2. Athuvaaa Varuthu.. Ithukku ellam kaaranam solla mudiyumaa pa! :)

    ReplyDelete
  3. unmai oru nall velli vanthae theerum

    ReplyDelete