Friday, May 8, 2009

தாழிடப்பட்டவை



தாழிடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால்

கசியும் கணங்கள் கசப்பானவை…




ஆசையாய் வளர்த்த நாய்க்குட்டியோ

எதிர் வீட்டு குழந்தையின் சிரிப்போ

மீட்டுத் தர கூடிய கனவை,



அலட்சியமாய் சொல்லப் பட்ட

சில வார்த்தைகள்

சில புறக்கணிப்புகள்

சில மதிப்பீடுகள்

கலைத்துவிடுகின்றன.




தாழிடப்பட்ட அந்த மனங்கள்

தோள் சாய்தலோ

கண்ணீர் துடைக்க

ஒற்றை விரலோ இல்லாமல்

முற்றுப்பெறுகின்றன.




உலகின் பெருங்கருணைக்கு

சாட்சியாக சுவரொட்டியில்

கண்ணீர் அஞ்சலி புகைப்படங்கள்

சிரித்தப்படியே இருக்கின்றன….

No comments:

Post a Comment