Sunday, March 22, 2009

Alfred Hitchcock - மர்மங்களின் மன்னன்

நம் ஆழ்மன இச்சைகளுக்கு ஒரு வடிகால் ஆகவோ அல்லது நல்ல வேலை நான் அப்படி இல்லை என்னும் சமாதானத்துக்காகவோ அவை உதவுவதால் தானோ என்னமோ மர்ம கதைகள் எப்போதுமே வசீகரமாக உள்ளது. "குற்றம் நடைபெறுவதில் அல்ல அதை பற்றிய எதிர்பார்ப்பில்தான் இருக்கிறது சுவாரசியம்" என்னும் Alfred Hitchcock மர்மங்களை கொண்ட திரைப்படங்களை உருவாக்கியதில் மன்னன் என அறியபடுபவர் . வித விதமான கொலைகளை விவரித்து பார்வையாளனை திருப்தி படுத்த முனைந்தவை அல்ல இவரின் திரைப்படங்கள் மாறாக கொலை செய்தவனின் மன நிலையையும் அதன் காரணமாய் அவனது வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களையுமே நம் முன் நிறுத்துகிறது. ஒரு வகையில் நம் மனத்தை பற்றிய அகதரிசனம் Hitchcockன் படங்கள்.




லண்டன் நகரில் 1899 ஆம் ஆண்டு பிறந்த இவர் 1920 முதல் திரை துறையில் பணியாற்ற தொடங்கி 50 மற்றும் 60 களில் Hollywoodன் முடி சூடா மன்னனாக விளங்கினார்.20 மற்றும் 30 களில் லண்டன் நகரில் BlackMail (1929), The Lady Vanishes (1938) என்னும் வெற்றி படங்களின் மூலம் தன் திரை வாழ்க்கையை துவக்கிய இவர் Rebecca (1940)மூலம் Hollywoodல் தடம் பதித்தார்.40 களில் இவர் இயக்கிய படங்கள் பல முன்னோடி


முயற்சிகள்.உதாரணமாக Life Boat (1944)ல் ஒரே ஒரு படகில் முழு திரைப்படத்தையும் உருவாக்கி இருந்தார், அதன் ஊதாகவே காதல், கல்கம், துரோகம், கருணை என அத்தனை அம்சங்களை கொண்டு வந்திருந்தார். பின்னர் Rope(1948) திரைப்படத்தில் ஒரே Shotல் முழு திரைப்படத்தையும் எடுத்தார் (Editing, Retake என எதுவும் இல்லை படத்தில்!!).இந்த வருடங்களில் வெளிவந்த படங்களில் Notorious(1946) (தனி Blogல் நிச்சயமாக) எனது Personal Favourite. Spellbound (1945), Shadow of Doubt (1943) ஆகியவை சிறப்பானவை.
"என்னுடைய பயத்தை போக்கி கொள்ளும் ஒரே வழி அதை பற்றிய திரைப்படங்கள் எடுப்பது தான்" என்னும் Hitchcock 50 களில் திரை துறையில் சிகரங்களை தொட்டார். இவரது Masterpieceகள் ஆன Strangers on Train (1951), Dial M for Murder (1954), Rear window (1954), Northby Northwest (1959) மற்றும் Vertigo (1958) ஆகியவை இந்த வருடங்களில் வெளிவந்தன. Rear Wndowல் கால் உடைந்து வீட்டு பால் கணியில் உட்கார்ந்திருக்கும் ஒருவர் எதிர் Plotல் கொலை நடந்திருக்கிறது என சந்தேக படுவதை பற்றியது. படம் முழுதும் நாம் நம் வீட்டு பால் கணியில் இருந்து படம் பார்ப்பது போலவே எடுக்க பட்டிருக்கும். சுஜாதாவின் "விரும்பி சொன்ன பொய்கள்" குறுநாவலில் இவரது Vertigo திரைப்படத்தின் சாயல் இருப்பதை சமீபத்தில் பார்க்கையில் உணர முடிந்தது.


இவரது அதிகம் பேசப்படட படமான The Psycho(பாலு மகேந்திராவின் மூடுபனி!!) 1960 ஆம் ஆண்டு வெளியானது.காட்சி அமைப்பு களிலும், கதை சொல்லும் முறையிலும் பல உத்திகளை கொண்டு வந்த Hitchcok தொலைக்காட்சி தொடர்களும் இயக்கி உள்ளார்.இவரது "Alfred hitchcock வழங்கும்" என்ற பெயரொடு வெளியிடப்பட்ட ஒரு மணி நேர தொடர்கள் பிரசித்தி பெற்றவை. பொதுவாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவாரான இவரிடம் "Laurel and Hardy" வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளதா என்றதற்கு, "I was already Hardy inside" என்றார்.




தான் இறுதி நாட்கள் வரை திரை துறையில் இருந்த இவர் தன்னுடைய கல்லறை வரிகளாய் "நான் ஒரு கதை கருவில் ஆழ்ந்திருக்கிறேன்" என பொறிக்க சொல்லி விட்டு 1980 ஆம் ஆண்டு மர்மமானார் (மறைந்தார்!!).

No comments:

Post a Comment