Saturday, March 7, 2009

எஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று



(நன்றி Anyindian வலைத்தலம்)

கதைகள் உலகை பிரதிபலிப்பதில்லை மாறாக கதைகள் தனக்கென ஓர் உலகத்தை கொண்டுள்ளது என்கிறார் எஸ். ரா தன் முன்னுரையில்.12 சிறுகதைகளை கொண்ட இந்த தொகுதியில் உள்ள அத்தனை கதைகளும் சம்பிரதாயமான கதைகளில் இருந்து பல வகையில் மாறுபட்டு உள்ளது. கதைகளில் மைய கதாபாத்திரத்தை சுற்றி நிகழ்ச்சிகளை அமைக்காமல், அந்தரங்கத்தில் அறியாமல் மண்டி கிடக்கும் சில ரகசியங்களை ஒட்டி கதை நகர்கிறது. சில கதைகளில் வரும் காட்சிகளும் சம்பவங்களும் கொண்டு எஸ். ரா முன் வைக்கும் கேள்விகள் மிக அந்தரங்கமானவை.


பிழைத்திருத்துபவரின் மனைவி
அச்சகத்தில் பிழை திருத்தம் செய்யும் மந்திரமூர்த்தியின் மனைவிக்கு காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகிறது என தொடகுகிறது இந்த கதை. அதிகம் பேசாத, நண்பர்கள் அதிகம் அற்ற, பிழை திருத்தம் செய்வதை மட்டுமே அறிந்த, நகைச்சுவை என்பது கூட பிழைகளில் வருவதை மட்டுமே ரசிக்க தெரிந்த ஒரு மனிதராய் மந்திரமூர்த்தி அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் மனைவியோ பாடல் கேட்பதில் ஆர்வம் உள்ள, பேசுவதில் ஆர்வம் உள்ள ஒரு சாதாரண கிராமத்து பெண்.அந்த பெண் மனத்தின் மீது காகிதமும், மந்திரமூர்த்தியின்யின் நடவடிக்கைகளும் செலுத்தும் வன்முறை மிக அழகாய் இந்த கதையில் சித்தரிக்கபட்டுள்ளது.
http://sramakrishnan.com/deep_story.asp?id=118&page=3


பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்
அதிகம் பாராட்ட பெற்ற எஸ். ரா வின் இந்த கதை, குடும்பம் என்னும் அமைப்பு பெண் மீது தொடர்ந்து நிகழ்த்தி வரும் ஆதிகத்தையும் அதன் மூலம் சிதிலப்படும் அவள் ஆளுமையும் பி.விஜயலெட்சுமி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் மிக அழகாக விவரிக்க பட்டுள்ளது.
http://sramakrishnan.com/deep_story.asp?id=133&page=3


மூன்று குடும்பக் கதைகள்
மூன்று சிறுகதைகள் இந்த தலைப்பின் கீழ் வருகிறது. முதல் கதை, திருமணமான புதிதில் ஒரு பீங்கான் கோப்பையை தவறவிட்டதற்காக, தன் கணவன் தன்னை அடித்து விட 42 வருடம் அவரிடம் பேசாமல் தலையை கவிழ்ந்த வண்ணமே இருந்து அவர் மரணம் அடைந்த அன்று பிணத்தின் முன் வந்து தலையை நிமிர்த்தி பார்த்து “நான் வேணும்னு பீங்கான் கோப்பையை உடைக்கலைங்க” என்று சொல்லும் பெண்ணை பற்றியது.”ஙப் போல் வளை” மற்றும் ”இல்லறம்” என்னும் மற்ற இருகதைகள் முன் வைக்கும் கேள்விகள் மிகுந்த வலி தர கூடியவை.
http://sramakrishnan.com/kathai_1.asp


பணாரஸ்
பணாரஸ் படித்துறையில் தொடங்கும் இந்த கதை, அந்த நகரத்தின் மர்மத்தையும் வசீகரத்தையும் மிக அழகாய் படம் பிடித்துள்ளது. கதை முடிந்த உடன் ஓர் மர்ம உலகல் சூழ்ந்திருப்பது போன்ற பிரமை!!!


பதினைந்து வயதில் ஒருவன்
பதினைந்து வயது என்னும் முதிரா பருவத்தின் ஒரு நாளில் ஒருவன் எதிர் கொள்ளும், பின் நாளில் அவனின் ஆழ் மனத்தில் நிரந்திரமாய் தங்கி விட போகும் “ஒரு” நாளை பற்றியது.


நடந்து செல்லும் நீரூற்று
வியாபாரத்தில் நொடிந்து மகள் வீட்டில் தங்கி வசிக்கும் ஒருவர், மற்ற யாருக்கும் தெரியாமல் வீதியில் தான் நடக்கும் போது தனக்கு மட்டும் தெரியும்படி தன் கால்களுக்கு அடியில் இருந்து வரும் ஓர் நீரூற்றை தேடும் கதை.


சம்பிரதாயமான கதைகளில் இருந்து மாறுபட்டு வேறு வகையான கதைகளை படிக்க விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தொகுப்பு.

2 comments:

  1. Sir,
    Even a grand book exhibition held at my town (Puducherry) couldn't give me a good collection of books. This reference will do more for people and myself.

    Thanks.

    ReplyDelete
  2. Thanks Bala, This book is really a nice collection, style and content is entirely different. Kandipa padiyungal....

    ReplyDelete