Tuesday, March 24, 2009

Lifestyleல் தான் அந்த தேவதையை பார்த்தேன்

2008 ஆம் ஆண்டின் முதல் நாள் தான் அது நடந்தது. நானும் என் நண்பனும் மைலாப்பூர் கபாலிஷ்வரர் கோவில், சரவண பவன் டிபன், அப்படியே "சத்யம்" போய் Ratatouille படம் என ஒரு Highclass திட்டத்தோடு கிளம்பினோம். கபாலிஷ்வரர் கோவில், வருடம் முதல் நாள், கூட்டத்தை சமாளித்து உள்ளே சென்றோம். எப்போதும் செல்லும் பொது தரிசன வழிக்கு 20 ரூபாய் டிக்கெட் விற்பனை ஜருறாய் நடந்து கொண்டிருந்தது. இதுக்கு எதுக்கு 20 ரூபாய் என நினைத்து வரிசையில் சற்று முன்னேறியவுடன், ஒரு வழி எங்களுக்கு இடையில் வந்து புகுந்தது, வரிசையில் வாங்கப்பா என்றதர்க்கு 100 ரூ டிக்கெட் காட்டினார். சிவனை தரிசித்து வெளியே வருகையில், வாசலுக்கு வெளியே ஒரு தாத்தா தன் பேரனை தோள் மேல் தூக்கி "அதோ தெரியரார் பார் அவர்தான் சாமி, கும்பிடு" என்று சொல்லி கொண்டிருந்தார். டிக்கெட் வாங்காத பொது ஜனம்!!!


அடுத்து சரவண பவனுக்குத்தான் சென்று இருப்போம், அந்த வெண் பொங்கல் குடுக்கும் பெரியவர், "வாங்க சார் வந்து வாங்கிக்குங்க" என சொல்லாமல் இருந்திருந்தால். மீண்டும் வரிசை, பொங்கல் வாங்கிய என் நண்பன், பழக்க தோஷத்தில் வடை இல்லய என்றான். மெல்ல கொடுத்த இருபது ரூபாய்க்கு மேலாகவே இரண்டு முறை வரிசையில் நின்று என் நண்பன் மாலை உணவை முடித்து விட்டு, வருகையில் அந்த 100 ரூ டிக்கெட்ல் வந்தவர் மூன்றாவது முறை வரிசையில் நின்று கொண்டு இருந்தார். எப்படியோ ஒரு மாதிரி Adjust ஆயிடுத்து என சொல்லி கொண்டோம்.


ஆண்டி எங்கே? என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது, சத்யம் தியேட்டர் நோக்கி செல்கையில், என் நண்பன், " டே என் PLக்கு அடுத்த வீக் கல்யாணம், Teamல 3000 ரூ Collect பண்ணி இருக்கோம், வா Lifestyleல Gift Voucher வாங்கிட்டு போய்டுவோம்" என்றான்.அது என்னடா PLங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகுது என சொல்லி கொண்டு கடை உள்ளே நுழைந்தோம்.


கல்யாண சீருக்கு வேண்டிய அத்தனை சமாச்சாரமும் இருந்தது, முடிந்த வரை அத்தனையும் கண்ணாடியில்!!!. முதல் மாடியில் வித விதமான கட்டில்கள் - ஓர் கட்டிலின் விலை சற்றே குறைய நான் Apply பண்ணி வாங்கி இருந்த Personal Loan அளவுக்கு இருந்தது, அதை மூன்று வருடத்தில் கட்டி முடிப்பதாக வங்கிக்கு வாக்கு கொடுத்து இருந்தேன். அந்த கட்டிலை சுற்றி சில குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தன, அங்கே வந்த அதன் அம்மா "பீங்கி, ரிச்சா வா போகலாம்" என்று கூட்டி கொண்டு போனார்.


மெல்ல என் காதில் ஒரு இளையராஜா BGM கேட்க திரும்பினால் ஒரு பெண் - 20 வயது - தங்க நிறம் - பாப் முடி - சிகப்பு குடுத்தா - Blue Jean. பெண்ணே உனக்கு குடுதா யார் குடுத்தா? என கவிதை எல்லாம் தோன்றியது. என் நண்பன் , வாடா படத்துக்கு நேரம் அச்சு, Gift Voucher வங்கலாம் என்றான், வாங்க Counter அருகே வந்தேன். மெல்ல அவளும் அங்கே வந்தால். இதயம் - பட்டாம்பூச்சி - வானம்- பூ- பனி துளி அத்தனையும்!!!


அவள் சிரித்து கொண்டே அருகே வர, ஓர் உருவம் எங்கள் இருவருக்கும் நடுவில் ஓர் குழந்தையை வண்டியில் தள்ளி கொண்டபடி. குழந்தை மிக சிறியது. கண்ணை மூடி ஏதோ சிந்தனையில் இருந்தது. அந்த குழந்தையை பார்த்துவிட்டு, மேலே பார்த்தால், ஆ!! இந்த தேவதையை நான் எங்கோ பார்த்து இருக்கிறேன், அவரும் என்னை தான் பார்க்கிறார். என் நண்பன் காலை மிதிக்கிறான், ஏன் என தெரியவில்லை. ஆனா இந்த தேவதை?? அதற்க்குள் வெளியே ஓர் Carவர அந்த தேவதையும் அவருடன் வந்த ஓர் அம்மாவும் காரில் ஏற, என் நண்பன் டேய் பார்த்தியாடா?, யாரு? என்றேன், "ஜோதிகா டா நாம ஜோ" என்றான். ஆமாம் ஜோ தான் அது,


இப்படி தான் ஜோவை விட்டு விட்டேன், ஒருவேளை அவரை பார்த்து சிரித்து இருந்தால், "நல்லா இருப்போம் நல்லா இருப்போம்,எல்லோரும் நல்லா இருப்போம்" என புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருக்கலாம்.

No comments:

Post a Comment