Thursday, March 5, 2009

ஏன்? - தேவா!!!

நான் முடிந்தவரை "ஏன்?" என்ற கேள்வியை தவிர்கிறேன். காரணம் நீங்கள் நினைப்போது போல் தத்துவார்த்தமான ஒன்று அல்ல.அதை விளக்க ஒரு சின்ன Flashback தேவைப்படுகிறது.கல்லூரியில் என் நண்பன், வகுப்பு தோழனுக்கு அபாரமான திரை பட ஞானம் உண்டு, அவனிடம் இருந்துதான் திரைப்படங்களில் என் ரசனையை நான் வளர்த்து கொண்டேன். அவன் ரசனை பரந்த தளங்களில் விரிவது, அவனை போலவே!!. தமிழ் நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தண்ணீர் பிரிச்சனை வந்த போது காவிரியை ஒரு பெண்ணை போல் உருவகித்து பிரபுதேவா நடித்து வெளிவந்த "காவேரி" என்ற உலக திரைப்படத்தை பார்த்தவர்கள் அவனும், கோவை கற்பகம் Complex தியேட்டர் அப்பிரேட்டர் மட்டுமே. அந்த படத்தில் வரும் "விட மாட்டேன் விட மாட்டேன்" என்ற பாடலை ஒரு வாரம் வரை முணு முணுத்து கொண்டிருந்தான்.


"துள்ளுவதோ இளமை" வெளி வந்து ஒரு புயலை உருவாக்கி விட்ட போது அதற்கு போட்டியாக அவன் முன் வைத்தது "ப்லஸ் 2" என்ற திரைப்படம்.Internal Exam நடக்கையில் கண்ணில் காண முடியாத DNA,RNA வகாயாறககலில் வெறுபுற்று அவன் காலை Internals மதியம் கட் அடித்துவிட்டு ஒரு திரைப்படம் என கழிக்க முற்பட்டான், 11 பேர் மட்டுமே கொண்ட வகுப்பில் 5 பேர் அவன் கருத்தை ஆமோதித்தது அவன் உடன் சென்றது தற்செயலல்ல.


அவன் சொல் வன்மை அத்தகையது. அந்த Internal களை கட் அடித்து அவன் பார்த்த திரைப்படங்களின் வரிசை பின் வருமாறு, விஜயகாந்த் Comedyள் கலக்கிய, "எங்கள் அண்ணா", 75 வருட தமிழ் சினிமாவின் வரலாற்றில் பதிக்கவேண்டிய பிரசாந்தின் திரை காவியம் "ஜெய் ", முற்றிலும் வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட சத்தியாராஜின் "அய்யர் IPS". இதன் உச்சக்கட்டம் காட்சிக்கு காட்சி திரையில் கோடு போட்டு ஒரு பக்கம் த்ரிஷா, ஒரு பக்கம் தருன் என அமர காதலை வெளிப்படுத்திய "எனக்கு 20 உனக்கு எவளோ? sorry, உனக்கு 18" படத்தை காதலை தமிழ் சினிமாவில் இதை விட அழுத்தமாய் சொன்தில்லை என்றான்.இவ்வளவு சொன்ன பிறகு, நட்பின் இலக்கணத்தை வெளிப்படுத்திய சிறந்த படம் என்று அவன் குணால், கரன் நடித்த ஒரு படத்தை சொன்னதை சொன்னால் நீங்கள் ஆச்சரிய பட போவதில்லை.


இப்படியே முற்ற விட கூடாதென முடிவெடுத்த நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவனுக்கு முறையே "அலைபாயுதே" மற்றும் "தளபதியை" DVDயில் போட்டு Scence by Scene ஆக explain செய்தோம். அப்போது நான் சும்மா இருக்காமல், ரஜினி சிறையில் அடைப்பட்டு வேறு ஒருவன் குற்றத்தை ஒப்பு கொண்டதால் விடுதலை ஆகி வெளி வரும் காட்சியில் வசனத்தின் வீரியத்தை அவனுக்கு உணர்த்த அதே காட்சி மற்ற படங்களில் ஒரு பக்க வசனத்திற்கு நீண்டிருக்கும் ஆனால் ரஜினி "ஏன்" என்பார், அதற்கு பதில் "தேவா" என்ற ஒற்றை வரியில் மணி முடித்ததை சொன்னேன்.அதன் பின் எங்களிடம் பேசாமல் ஒரு அரை மணி நேரம் யோசித்து கொண்டிருந்தான்.


மறுநாள் Hostel Bathroomல் அதிக நேரம் உள்ளே இருந்து வந்தவனிடம் "ஏன்?" என்றேன் "தேவா" என்று சொல்லி சென்று விட்டான்.அதன் பின் ஆசிரியர் Attendance lagக்காக "ஏன்" என்றபோது, பணத்தை வாங்கிவிட்டு திரும்ப கொடுகலயே "ஏன்?" என்றபோது என இந்த 7 வருடத்தில் அவனிடம் எப்போது யார் "ஏன்" என்றாலும் அவனின் ஒரே பதில் "தேவா".

1 comment: