Tuesday, March 3, 2009

Mountain Patrol - உறை பனியில் ஒரு ஊடுருவல்



திபெத்திற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள பனிமலையின் உயர்ந்த பகுதியான கிகிஜிலியில் வாழும் அரிய வகை கலைமான்களை வேட்டையாடுபவர்களை தடுத்து நிறுத்த போராடும் கிராம காவலர்களை பற்றிய படமிது. National Geographic Channel தயாரித்த இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி Berlin,Tokyo விருதுகள் உட்பட பல சர்வதேச விருதுகளை பெற்றது.


Tibetian Antelope எனப்படும் அரிய வகை கலைமான்கள் தொடர்ந்து வேட்டையாட படுவதை கண்டு, 1993 ஆம் ஆண்டு அந்த பணி பிரதேச கிராமம் ஒன்றில், முன்னால் ராணுவ வீரன் Ri Tai தலைமையில் தன் ஆர்வல குழு ஒன்று அமைகிறது.Ga Yu என்னும் Beijing நகர புகைப்பட கலைஞன் தீபெத்திய பழங்குடி மக்களிடம் உள்ள புராதன சடங்குகளை பற்றி அறிய அந்த கிராமத்திற்கு வருகிறான். அந்த சமயத்தில் கலை மான்களை காப்பாற்ற Ri Tai தலைமையில் குழு ஒன்று ரோந்திற்கு புறப்பட, தானும் அவர்களுடன் வருவதாய் சொல்லி கிளம்புகிறான்.


அந்த பனி மலையில் அவர்களின் பயணம் அந்த அப்பாவி கலைமான்களை காப்பாற்ற புறப்படுகிறது. சில லட்சங்கள் இருந்த அந்த மான்கள் 1990 ள் இருந்து 1996 க்குள் 1000 சொற்பத்திற்கு குறைந்துள்ளது. மிகவும் விலை உயர்ந்த அதன் தோலுகாகவே அவை வேட்டையாடப்பட்டு வந்துள்ளது.அவர்கள் பயணம் தோறும் அவர்கள் கடந்து போகும் அந்த பனி பிரதேச நிலகாட்சிகள் ஓவியம் போல் நம் கண்கள் முன் விரிகிறது. தூரத்தில் சூரியன் தெரிய அதன் மெல்லிய வெளிச்சத்துடன் படமயக்க பட்டுள்ளது. இந்த முறை எப்படியும் அந்த கொலைகாரர்களை பிடித்து விட எண்ணி தொடங்கிய அவர்கள் பயணத்தில் சூரிய ஒளியில் உருகும் பனி போல் அவர்கள் கொண்டு வந்திருந்த உணவு மற்றும் எரி பொருட்கள் குறைந்து கொண்டே வருகிறது.



வழியில் ஓர் ஆயிரம் தோள்கள் ஓரிடத்தில் குவிக்கபட்டிருக்க, அந்த தோலுக்குறிய உடம்புகள் கழுகுகளின் உணவாய் இரைந்து கிடக்கிறது. அதை கண்டு மேலும் கோபமுற்ற , அந்த கொள்ளையர்களுக்கு தோல் எடுக்க உதவும் சில கிராம மக்களை கைது செய்து கொண்டு தன் பயணத்தை மீண்டும் தொடர்கிறான்.வழியில் எரி பொருள் தீர்ககயில் கைது செய்தவர்களையும் தன் குழுவை சேர்ந்தவர்களையும் அங்கேய விட்டு விட்டு Ri Tai தன் பயணத்தை தொடர்கிறான். இறுதியில் Ri Tai மற்றும் Ga Yuவும் கொள்ளையர்களை கண்டு பிடிக்கின்றனர். ஆனால் போதிய ஆள் மற்றும் ஆயுத பலம் இல்லாமல் Ri Tai அவர்களால் சூடப்பட்டு இறக்கின்றான். Ga yuவுக்கும் அந்த கூட்டத்திற்க்கும் தொடர்பு இல்லை என அறிந்து அவனை விடுவிக்கின்றனர். உயிர் தப்பிய Ga Yu அங்கு நடந்த விசயங்களை வெளி கொணர்ந்து அதன் மூலம் அரசின் கவனம் பெற்று அந்த மலை பிரதேசம் அரசின் கண்கானிப்புக்கு வந்ததாகவும், கலை மான்களின் எண்ணிக்கை தற்போது சில லட்சங்களை தாண்டி உள்ளது என்னும் குறிப்புடனும் படம் நிறைந்தது.



பயணத்தில் ஒருவனுக்கு Pulmonary Hedia வந்து வீழ்க்கையில், அவனுக்கு Inject செய்ய மருந்திற்கு தண்ணீர் தேவை படுகையில், அவன் இரத்ததையே எடுத்து அவனுக்கு உபயோக படுத்தும் காட்சியும், வண்டி பழுதாகி நின்று விட மீண்டு திரும்ப வழி இல்லாமல் மரணம் நெருங்கி வர அந்த காவலர்கள் துயருறும் காட்சியும் மிக அழகாக படமாக்க பட்டிருந்தது.


ஓர் ஆவண படத்தின் கருவை கொண்டிருந்தாலும் ஓர் சிறந்த திரைபடமாகவும் இப்படம் வெற்றி பெற்றது. நேர்த்தியான Camera , நேரான கதை, காட்சிகளின் வீரியம், உறுத்தாத பின்னணி இசை என பல சிறப்பம்சங்களை கொண்ட இப்படம் பார்த்த பின் பல நாட்களுக்கு நம் நினைவில் நிழலாடி கொண்டிருக்கும்.



இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 | 4 | 5 |

No comments:

Post a Comment