Tuesday, February 17, 2009

City Lights - காதல் கணங்கள்



உலகின் தலை சிறந்த இயக்குநர்களின் விருப்ப பட்டியலில் தவறாமல் இடம் பெரும் திரைப்படம் சார்லீ சாப்பிளினின் “சிட்டி லைட்ஸ்”. சார்லீயின் படங்களிலே மிக சிறந்ததென கருதப்படும் இப்படம் பேசும் படங்கள் வெளியாகி மிக பெரிய மாற்றத்தை திரை உலகில் கொண்டு வந்திருந்த 1931 ஆம் ஆண்டு மௌன படமாக வெளியாகி வெற்றி அடைந்தது. காதல், கருணை, அன்பு, சிரிப்பு என அத்தனை அம்சங்களையும் கொண்ட City Lights, காதலின் உன்னத கணங்களை உணர்த்திய படங்களில் முதன்மையானது.


படத்தின் துவக்க காட்சியில் நகரத்தின் மேயர் தலைமையில் அமைதியையும், வளத்தையும் விரும்பும் வகையில் ஒரு சிலை திறப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது. வழக்கமான “பெரியோர்களே தாய்மார்களே”வுக்கு பிறகு சிலை திறக்க பட, அந்த சிலையில் உள்ள பெண்ணின் மடியில் தூங்கி கொண்டு இருக்கிறார் சார்லி. அதில் இருந்து இறங்க அவர் செய்யும் அட்டகாசங்கள் அழகானவை.நகரத்தின் வீதிகளில் நாடோடியாய் திரியும் Chaplin தெரு ஓரத்தில் பூக்கள் விற்கும் பார்வையற்ற பெண் (Virginia Cherill) மீது காதல் கொள்கிறார். அந்த பார்வை அற்ற பெண் அவரை செல்வந்தர் என நினைத்து கொள்ள, அவள் ஆசை படியே தன்னை செல்வந்தராக காட்டி கொள்கிறார்.




குடித்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒரு செல்வந்தரை சார்லீ காப்பாற்ற அவர் மிக நெருங்கிய நண்பர் ஆகிறார் (போதை தெளியும் வரை!!!). தெளிந்தவுடன் வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். அவருடன் இணைந்து சார்லீ செய்யும் அட்டகாசங்கள் தொடர்ந்து சிரிப்பை வரவழைத்த வண்ணம் உள்ளது.


பின் Virginia Cherillவிற்கு வீட்டு வாடகை தர அவசரமாக பணம் தேவைப்பட அதற்கான பணத்தை புரட்ட முற்படுகையில் போலிசாரால் கைது செய்ய படுகிறார். கைது செய்யும் முன் அவளை சந்தித்து அவளின் வீட்டு வாடகைக்கும் அவள் கண் சிகிச்சைக்கும் பணத்தை அவளிடம் தந்து விட்டு வெளியூர் போவதாக சொல்லி செல்கிறார். சிறையில் இருந்து வெளி வந்த உடன் அவள் பூ விற்ற இடத்தில் அவள் இல்லாததை கண்டு வீதியில் சுற்றி திரிக்கிறார் சார்லீ.


கண் பார்வை பெற்ற அவர் காதலி அந்த வீதியின் முனையில் ஒரு பூ கடை வெய்த்து அங்கு வரும் செல்வந்தர்களில் சார்லீ இருப்பாரா என தேடி கொண்டு இருக்க, அந்த வழியில் செல்லும் சார்லீ அவளை சந்தித்து சில கணங்கள் தன்னை மறந்து நிற்கிறார். அவள் தன் பாட்டியிடம் அவன் மனத்தை நான் கொள்ளை அடித்து விட்டேன் போல் இருக்கிறது என சொல்லி சிரித்து அவரிடம் ஒரு ரோஜாவை தருகிறாள். சார்லீ அதை வாங்க மறுத்து அந்த இடத்தை விட்டு செல்கையில் அவரை தடுக்க கையை பிடிக்கையில் சார்லீ தான் தன் காதலன் என உணர்ந்து, “நீங்கள்தானா?” என்கிறாள். அதற்கு சார்லீ “உனக்கு என்னை தெரிகிறதா?” என கேட்க, இருவரின் கண்ணீர் மிகுந்த சிரிப்புடன் படம் நிறைவடைகிறது.





உன்னதத்தை தொட்ட அந்த இறுதி காட்சி திரை உலக நடிப்பில் ஒரு மைல்கள். தன்னுடைய சுய சரிதையில் தனக்கு மிகவும் விருப்பமான காட்சியாக சார்லீ இந்த காட்சியை குறுப்பிட்டு உள்ளார்.


இந்த வரிசையின் முந்தைய பதிவுகள் 1 | 2 | 3 |

No comments:

Post a Comment