Wednesday, February 4, 2009

மேலும் சில கவிதைகள்

சிறந்த கவிதைகள் எதையும் விவரிப்பது இல்லை, குறிப்பால் உணர்த்தவே முற்படுகிறது. கவிதையில் சொல்லப்பட்டவைகளை விட சொல்லப்படாத்தாவைகளே முக்கியம், அதன் மறைப்பிரதி (subtext) நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் அனுபவத்தின் ஊடாகவே கவிதை ஜீவித்திருக்கிறது என்பது என் எண்ணம்.. நாம் சாதாரணமாய் காணூம் நிகழ்வுகளை மொழி ஆளுமைக் கொண்டு பதிவு செய்கிறது இன்றைய நவீன கவிதை. அவற்றில் என்னை கவர்ந்த சில வரிகள்….

இந்த மழையில்
குளிர குளிர நனைகிறேன்
வராமல் போகலாம்
இன்னொரு மழை (மகுடேஸ்வரன்)
—————————————————————————————————————

பறவை
சிறகை மீறிய ஆகாசத்தை
அளந்து ஓய்ந்து
அலகை மீறிய வனத்தை
உண்ண அமர்ந்தது (எம். யுவன்)

—————————————————————————————————————

எந்த பறவை எதநிடம் சொல்கிறது
பறந்தததை, பார்த்ததை, கூட்டை, நிழலை, சிறக்கொடிந்ததை (ப.கல்பனா)

—————————————————————————————————————-

பருவம் தப்பிய மழைக்கும்
மண் விடுவிக்கிறது
தன் வாசத்தை (சல்மா)

——————————————————————————————————————

பார்த்துக்கொண்டிருந்த கண்ணாடி
கை தவறி விழுந்து உடைந்து
நொறுங்கினபோது
பார்த்துக் கொண்டிருந்தேன்
கை தவறி
விழுந்து
உடைந்த
கண்ணாடியை (நீட்சி என தலைபிடபபட்ட இக்கவிதையும் எம். யுவனுடையது)

—————————————————————————————————————–

என்னதான் நடந்து பார்த்தாலும்
என் ஆக்கிரமிப்பு சின்ன மூலைதான்
ஒரேயொரு சிறகு சிமிட்டலில்
மாடிப் பரப்பின் அகலத்தை
அழித்து போகிறது அந்த சிட்டுக்குருவி (உமா மகேஷ்வரி)

—————————————————————————————————————–

குழந்தைகளின் ஜன்னல்
இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்க சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்
இதெல்லாம் ஒரு காரணமா? (முகுந்த் நாகராஜன்)

——————————————————————————————————————–
அடுத்த முறை சில நல்ல காதல் கவிதைகள் தர உத்தேசம்……பார்க்கலாம்

No comments:

Post a Comment