Monday, February 2, 2009

சில கவிதைகள்

என் கவிதை ரசனை தொடர்ந்து மாறுதல் (வளர்ச்சி?) அடைந்து கொண்டே வந்துள்ளது. கல்லூரியில் ஒரு புத்தகம் நிறைய எழுதியவற்றை இன்று என் ரசனையில் பார்க்கையில் ஒன்று மட்டுமே தேரும் என தோன்றுகிறது. என் கவிதை வாசிப்பில் நல்ல மாற்றங்களை நிகழ்த்தியதற்கு சுஜாதா மிக முக்கியமான காரணம். வைரமுத்து, மு. மேத்தா என ஆரம்பித்த ரசனை அறிவுமதி,பழனிபாரதி,தபு சங்கர் என நீண்டு இப்போது பிரமிள், தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன்,கல்யாண்ஜி,மனுஷ்யபுத்திரன் என நிற்கிறது.நல்ல கவிதையில் சொல்ல பட்டவைகளை விட சொல்ல படாதாவைகள் அதிகம் இருக்கும்,பிரச்சாரம் கவிதை அல்ல, போலி பாசாங்குகள் நல்ல கவிதைக்கு தேவை இல்லை என்பது நான் உணர்ந்தது.
இனி என்னை கவர்ந்த சில கவிதைகள்….

இடமற்று நிற்கும்
கர்பிணி பெண் பார்க்கையில்
பேருந்துக்கு வெளிய பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம் எதை எதிர்பார்க்கிறாய் காதலையா? (சுகிர்தராணி)

-----------------------------------------------------------------------------------

ஒரு மூடிய இரவை திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய விரல்கள்,
ஒரு மூடிய விரலை திறந்தேன்
ஏகப்பட்ட மூடிய இரவுகள் (ஸ்ரீநேசன்)

-----------------------------------------------------------------------------------

பெண்களிடம் பேசுகையில்
முகத்தில் அறைவதாய் படும்
மாரப்பு சரி செய்தல்கள் (இரவி)

-----------------------------------------------------------------------------------

செவிட்டு ஊமையின்
பிச்சை பாத்திரத்தை
தட்டுகிறது மழை (Kobayashi - Japan Haiku)

-----------------------------------------------------------------------------------

தண்டவாளத்தில் தலை சாய்த்து
காத்திருக்கும் ஒற்றை பூ என் காதல்
நீ நடந்து வருகிறாயா இல்லை
ரயிலில் வருகிறாயா? (பழநிபாரதி)

-----------------------------------------------------------------------------------

பறவையின் சிறகிலிருந்து
விழுந்த இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
அதன் வாழ்வை எழுதி செல்கிறது (தருமு சிவராம்)

-----------------------------------------------------------------------------------

பிரமிள், தேவதேவன்,கல்யாண்ஜி ஆகியோரை முழுமையாய் படித்து விட்டு அவர்களின் சிறந்த கவிதைகளை எழுதுகிறேன்…..

No comments:

Post a Comment