Wednesday, February 25, 2009

மீண்டும் பள்ளிக்கு…



Airtel Super Singerல் நடுவர்கள் பேசும் Lower Registry, Higher Registry,சரணம் பல்லவி சமாச்சாரங்கள் புரியாதபோதும், இசையருவியும் (இப்போ சிரிப்பொலியும்), Sun Musicம் (இப்போ அதித்யாவும் -முதல்வர் பேரன்?!! ) மாத்தி மாத்தி மொக்கை போட்டு கழுத்தருக்கையில் என் அறைக்கு சென்று படுத்து விடுகிறேன். இந்த சமயங்களில் எல்லாம் சில எண்ணங்கள் Brownian Motion போல் மோதி கொள்கின்றன. பள்ளியில் நடந்த சில நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நினைவு வருகிறது,


அத்தனை நாள் என்னை திரும்பி கூட பார்க்காத அந்த 8 ஆம் வகுப்பு தோழி (;-)) , அந்த yellow பாவாடை அணிந்த அன்று மட்டும் ஏன் என்னை பார்த்து மெலிதாய் சிரிக்க வேண்டும்?.அத்தனை நாள் வண்ண வண்ண சேலை அணிந்து வந்து ஆசிரியைகள் எல்லாம் என் தீடீரென்று ஒருநாள் காவி நிறத்திற்கு மாறி போனார்கள்?.முக்கியமாக சில தமிழ் வகுப்பு சுவாரசியங்கள்…


8 ஆம் வகுப்பில் தமிழில் கடிதம் எழுதும் பயிற்சியில் மதிற்ப்புக்குரிய ஐயா(Iyya) என்பதை மதிற்ப்புக்குரிய ஜயா(Jeya) என என் நண்பன் எழுதியதை தி. மு. க விசுவாசியான தமிழ் அய்யா சிரித்து கொண்டே வகுப்பில் சொன்னார்.


“பிசிராந்தையார் தன் தலை முடி நரையாதிருக்க கூறிய காரணம் என்ன?” என்பதற்கு, “செம்பருத்தி தழையை எடுத்து வெயிலில் உலர வெய்து, நன்றாக அரைத்து தண்ணியோ, தயிரோ (மேலும் மினு மினுப்புக்கு பன்னீர் சேர்க்கலாம்!) போட்டு குழைத்து வாரம் மூன்று முறை வீதம் ஒரு மண்டலம் தடவி வந்ததால் தன் தலைமுடி” (மற்றதை அப்படியே கேள்வியில் இருந்து பொருத்தி கொள்ளவும்), என பதில் எழுதிய நண்பனை ஏண்டா இப்படி எழுதின? என்றேன், ” டேய் நேத்து படிக்கும் போது இந்த கேள்வி வந்ததாடா, பதில் பார்த்தா கோனார் Notesல ரொம்ப பெருசா இருந்ததா, பக்கத்துல அம்மா இருந்தாங்கால அவங்ககிட்ட கேட்டான், அவங்க அப்படியா தெளிவா சொன்னாங்க” என்று சிறுவர் மல்ர் முதல் பக்கத்து குழந்தையை போல் முகத்தை வெய்த்து கொண்டு சொன்னான். அவன் பெயர சொல்ல மறந்துடனே கரிகாலன்!!


அரிசந்திரன் தன் மனைவியை செல்வந்தாரிடம் விற்க முற்படுகையில் செல்வந்தன் அவனுக்கு இறுத்த பதில் யாது (பேரம்)? என்ற கேள்வி தமிழ் செய்யுள்ள இருக்கு (என்ன கொடுமை சார் இது?). ஏற்கனவே பிசிராந்தையார் பத்தி படிச்சு கடுப்பல இருந்த கரிகாலன், இந்த கேள்வியா பாத்துட்டு பொங்கி எழுந்தான், “பொன்னும் பொருளும் நிகராகாத என் மனைவியை” என அரிசந்திரன் சொல்வதாக ஆரம்பித்து, “இவளுக்கு ஒரு நயா பைசா கூட தர மாட்டேன், உன்னால முடிஞ்சதா பாத்துக்கடா” என்று சென்னை தமிழில் இறங்கி ஒரு சங்க கால பிரச்சனையை தீர்த்து வெய்த்து இருந்தான்.


இதன் உச்சகட்டமாக, “இந்தியா இயற்கை வளம் மிகுந்த நாடு என்பதை நிறுவு” என்னும் கேள்விக்கு, எங்கோ பட்டிமன்றத்தில் விளையாட்டாக பேசியதை நம்பி அவன் எழுதி இருந்த பதில் இது,


“இந்தியாவில் பல இயற்கை வளங்கள் நிறைந்துள்ளது, காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளம் மிகுந்த நாடு இந்தியா. அது மட்டும் அல்லாமல் செடிகள், கொடிகள், காய்கள், கனிகள் செழித்து வளரும் நாடு இந்தியா”….. இப்படி அவனுக்கு தெரிந்த காய் கனி வகைகளை பட்டியலிட்டு இரண்டு பக்கங்கள் எழுதிய கட்டுரையை இப்படி முடித்திருந்தான், “இவ்வாறு பல இயற்கை வளங்களை இயற்கையாகவே பெற்றுள்ள இந்தியாவை இயற்கை வளம் மிகுந்த நாடு என்று கூறுவது இயற்கைதானே?”.


சமீபத்தில் ஊருக்கு செல்கையில் அவனிடம் இந்த பிசிராந்தையார் விஷயத்தை கேட்டேன், மெல்ல சிரித்து விட்டு, “சுத்தி இருக்கவங்க நல்லவங்கனா எப்படிறா முடி நரைக்காம போகும், எனக்கு இன்னும் சந்தேகம்தான் அவர் கண்டிப்பா செம்பருத்தி தழைய தான் Use பண்ணி இருப்பாரு” என்றான், அவனுக்கு திருமணம் முடிந்து விட்டு இருந்தது!!.

2 comments: