Wednesday, February 4, 2009

சில காதல் கவிதைகள்

கவிதைகளில் காதல் எப்போதும் பாடு பொருளாக இருந்து வந்துள்ளது. இரு கண்கள் சந்தித்து கொள்ளும் சில நெருப்பு நிமஷங்களையும், நினைவில் தங்கிவிட்ட சில அற்புத கணங்களையும் கவிதைகள் எப்போதும் பதிவு செய்து வந்துள்ளது. ஒரு வேளை காதலும் கண்ணீரும் இல்லையென்றால் கண்களே மதிப்பு இழந்திருக்குமோ என்னும் அளவு பாடப்பட்டுள்ளது. அவற்றில் எனக்கு பிடித்த சில….

நீ முதல் முறை என்னை
தலைசாய்த்துக்
கடைக்கண்ணால் பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே
இன்னொருமுறை பார் (மீ.ரா)

—————————————————————————————————————-

அன்று கவிதைப் போட்டி
எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்
ஆனால் நீ மட்டும்
உன் கண்களோடு

———————————————————————————————————————

கண்ணே தயவு செய்து
இனி தொலைபேசியில் முத்தமிடாதே
உன் முத்ததை எல்லாம்
அது வாங்கி கொண்டு
வெறும் சத்தத்தை தான் எனக்கு தருகிறது…

————————————————

உன்னை கேலிபேசுவோரைக்கூட
முறைத்துப்பார்க்கிறாய்..
விரும்பிப்பார்க்கும் என்னையோ
திரும்பிப்பார்க்கவும் மறுக்கிறாய்!!

—————————————————–

எதற்காக கஷ்டப்பட்டு
கோலம் போடுகிறாய்..
சிறிது நேரம்
வாசலில் அமர்ந்துவிட்டு போ..போதும்!! (வேறு யார் தபு சங்கர் தான்)

——————————————————————————————————————————

உன் ஊர் என் ஊர்
வாசுதேவநல்லூர்
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலி சைவ பிள்ளைமார்
வகுப்பு கூட ஒன்று
உன் தந்தையும்
என் தந்தையும்
சொந்தக்காரர்கள் மைத்துநர்கள்
ஆதலால்
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே.. (மீ.ரா)

No comments:

Post a Comment