Thursday, March 5, 2009

நினைவுகளை கோர்த்து….

போன Blogகிற்கு வந்த லட்சக்கணக்கான பாராட்டுகளை தொடர்ந்து மிச்சம் உள்ள சில நிகழ்வுகளையும் சொல்ல முடிவு எடுத்து உள்ளேன்(எழுத ஆரம்பித்த உடன் ஒரு காரணம் வேண்டும் தானே!!).கோபி கிருஷ்ணனின் "உள்ளேயிருந்து சில குரல்கள்" பாணியில்…

காட்சி 1:

கல்லூரியில் முதல் வருடம் அப்போதுதான் கணினி முன் செயல்முறை வகுப்புக்காக (Correctu Lab தான்) உட்கார வைக்க பட்டோம்.கணினியை சிறிது நேரம் உற்று பார்த்து கொண்டிருந்த என் நண்பன், "டேய் டேய், இங்க வாங்கடா, என்றான், ஏதாவுது Shock அடிசிடுச்சோனு அவசர அவசரமாக சிலர் அங்கு கூடினோம், மெல்ல ஒரு ஆச்சரியத்துடன் அவன் சொன்னான், "டேய், இங்க பாரேன் (கையில் உள்ள Mouseஐ காண்பித்து), இத ஆட்டுனா அங்க அந்த அம்பு குறி ஆடுது பாரேன்" என்றான்!.முதல் செயல் முறை வகுப்பு என்பதை விட சிலருக்கு முதல் முறை கணினி முன் அமர்தல் என்பது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.


நிலை 1:
அவன் தற்போது M.S முடித்துவிட்டு எப்படியும் H1B விசா வாங்கி USல் Settleஆகும் ஆசையுடன் Newyork நகரின் வீதிகளில் சுற்றி கொண்டு இருக்கிறான்.


காட்சி 2:

முதலாம் ஆண்டு மாணவன் என பாராமல் ப்ரோப்பசாரே நம்மிடம் உதவி கேக்கிறாரே என நினைத்து பவ்வியமாக என்ன Sir? என்றான். அவர், ஒரு Document Type அடித்து பிரிண்ட் எடுத்து குடுப்பா என்றார். பின் அவர் சொல்ல சொல்ல அவன் MS Wordல் Documentஐ அடித்து முடித்த பின் மெதுவாக பின்னால் வந்தவர் சொன்னார், தம்பி, எல்லாம் OK, ஆனா எனக்கு பிரிண்ட் எடுக்கும் போது அதோ மேல இருக்கே ( Computer Screenன் இடது மூலையை காண்பித்து) இந்த File,Edit,View எல்லாம், Printல வராத மாதிரி பார்த்துக்கோ என்றார்.


காட்சி 3:

அந்த ப்ரோப்பசாரே அவசர அவசரமாக புத்தகத்தில் ஏதோ தேடி கொண்டிருக்கையில் அவன் உள்ளே சென்றான். என்ன பண்றீங்க Sir என்றான்?, அது ஒண்ணும் இல்ல, ஒரு சின்ன Distillation Method மறுநதுதுச்சு,எந்த Booklaல இருக்குனு தெரியல அதான் தேடிகிட்டு இருக்கேன் என்றார். உடனே அவன், Net இருக்குல sir, என்று, கூகிலினான்(Google) , Distillation Methodsவந்து கொட்டியது. மறுநாள் வகுப்புக்கு வந்தவுடன் மெல்ல Board அருகில் சென்று Professor வகுப்பை இப்படி ஆரம்பித்தார்.
Dear Students, "I am goin to tell a new thing to all today"
"THere is a Website called GOOGLE!!!!"


நிலை 2:

இப்போது அவர் அந்த Departmentன் HOD!!

காட்சி 4:

ஈராக்கின் மீது அமேரிக்க படைகள் சராமரியாக குண்டு மழை பொழிந்து கொண்டிருந்த காலமது. ஹிந்து முதல் ஜோதிட மாமணி வரை அத்தனை இதழ்களும் அதை பற்றிய செய்திகளையே வெளியிட்டு இருந்தது. Hostel அறையில் மெல்ல பேச்சு போர் பற்றி திரும்பியது. அப்போது நாங்கள் அமெரிக்க தாக்குதலின் மூல காரணமே எண்ணை கிணறுக்கள்தாம், அவர்கள் நோக்கமே அதை கை பற்றுவது தான், அதற்காக கவனத்தை திசை திருப்ப சில எண்ணை கிணறுகளையும் குண்டு வைத்து தகர்கின்றனர் என பேசி கொண்டிருந்தோம். அதையே உற்று பார்த்து கொண்டிருந்த என் நண்பன், "ஏன்டா, எண்ணை கிணறுகல பிடிச்சு அமெரிக்ககாரன் என்ன பண்ண போறான்? அதுவும் இல்லாம இந்த ஈராக்ல ஏன் முட்டாள்தனமா தேங்கா எண்ணை, கடலை எண்னையெலாம் இப்படி வெட்டை வெளியில அதுவும் கிணத்துல ஊத்தி வச்சிருகானுக என்றான்?


நிலை 3:
நிலை ஒன்றை மீண்டும் படித்து கொள்ளவும்.

4 comments:

  1. u can comment about him as good entertainer!!!looking forward about ur lovable chem mam(actually!!!!!)

    ReplyDelete
  2. Seyyalam, ana yaravathu kandu pichita!!!

    ReplyDelete
  3. Oh Man, I am just seeing your blogs...its awesome!

    ReplyDelete
  4. Thanks Vignesh for u r visit... and welcome to the blog..

    ReplyDelete