Wednesday, March 18, 2009

திரை இசை பாடல்களில் திருக்குறள் - ஒரு போட்டி

திருக்குறளையும் சினிமா பாடல்களையும் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாது என நினைக்கிறேன். ஏதேனும் ஒரு வகையில் இவை இரண்டும் நாம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் துணையாகவோ, ஆறுதலாகவோ வந்துள்ளது. சங்க மற்றும் கம்ப ராமாயணத்தில் இருந்து வரிகளை நவீனப்படுத்தி திரை இசை பாடல்களில் கண்ணதாசனும் வாலியும் குடுத்து உள்ளார்கள் என்பதை நாம் அறிவோம். நேற்று திருக்குறள் புத்தகத்தை புரட்டுகையில் (இன்பத்துபால்தான்!!), சில குறள்கள் திரை இசை குரல்களாய் ஒளித்து உள்ளத்தை கண்டேன்.


காதலை, காதலியை ஒரு பித்து நிலையில் இருந்தே வள்ளுவர் வர்ணித்து தள்ளி உள்ளார். "அணங்கு கொள் ஆய் மயில் கொல்லோ" நீ மனித பிறவியா இல்லை தேவதையா என்கிறார். சூடான பொருட்களை உண்ண மாட்டேன், ஏன் என்றால் என் நெஞ்சத்தில் உள்ள காதலன் அந்த சூட்டை தாங்க மாட்டான் என்கிறாள் காதலி. தும்மினால் தலையில் தட்டி பார்த்து பார்த்து என்கிறாள், தட்டி முடித்த அடுத்த நிமிடம், உங்களை நினைக்க வேண்டிய நான் இங்கு இருக்க யார் உங்களை நினைக்க நீங்கள் இங்கு தும்மினீர்? என கோபம் கொள்கிறாள்.Possesiveness?!!


மேலே குறிப்பிட்ட சில நிகழ்வுகள் பல நாம் பார்த்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம், உங்களில் அதிஷ்டம் உள்ள சிலர் வாழ்வில் அது நடந்தும் இருக்கலாம்.இங்கே சில திருக்குறளும் அதன் பொருளும் கொடுத்து உள்ளேன், அதன் கீழ் சில திரைப்படங்களின் பெயர்களையும் கொடுத்து உள்ளேன். உங்க வேலை ரொம்ப Simple, நீங்க என்ன பண்ணுங்க,எந்த குறள் எந்த திரைப்படத்தின் பாடலுடன் பொருந்துதோ அந்த எண்னையும் அந்த பாடல் மற்றும் பாடல் வரியையும் குறிப்பிடுங்கள். (இந்த பதிவின் பின்னூட்டமாக உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்).முடிந்த வரை எளிய குறல்களையே தேர்வு செய்து உள்ளேன், மேலும் அதன் பொருளையும் சுருக்கியே கொடுத்து உள்ளேன் (உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில்).


திருக்குறள்:

(a) கண்ணோடு கண்ணினை நோக்குஒக்கின் வாய்சொற்கள்

என்ன பயனும் இல

பொருள்: கண் பேசுகையில் வாய் சொற்கள் வேண்டுமா? - பார்வை ஒன்றே போதுமே!! ஓராயிரம் சொல் வேண்டுமா?


திருக்குறள்:

(b) நனவினால் நலகா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டுஎன் உயிர்

பொருள்: நேரில் இல்லை என்றால் பரவாயில்லை, அடியே கனவிலேனும் சொல் உன் காதலை என் உயிர் வாழும்!


திருக்குறள்:

(c) மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்

வேலை நீ வாழி பொழுது

பொருள்: மாலை பொழுதே, பிரிந்திருக்கும் என்னை வாட்டுவது ஏனோ?


திருக்குறள்:

(d) வாள்அற்றுப் புற்க்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாள்ஒற்றுத் தேய்ந்த விரல்

பொருள்: உன் வருகை பார்த்து என் கண் பூத்தது, நாள்காட்டி தாள் தள்ளி விரல் தேய்ந்தது..


திருக்குறள்:

(e) அவர்நெஞ்சு அவர்க்குஆதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது

பொருள்: நான் சொல்வதை கேட்க மாட்டாயா என் மனமே?


திருக்குறள்:

(f) கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள

பொருள்: ஐம்புலன் தரும் இன்பம் உன் கண்களிலே பெண்ணே!


திரைபடங்கள்: (1) காதல் வைரஸ் / ஏப்ரல் மாதத்தில் (2) நேருக்கு நேர் (3) சுப்ரமணியபுரம்/ கிரீடம் (4) மண்வாசனை/ நீ வருவாய் என (5) பூவெல்லாம் கேட்டுப்பார் (6) சேது.


பதில்களை <திருக்குறள் > -<படஎண்>-<பாடல்வரி> என்ற வரிசையில் குறிப்பிடுக. மேலே குறிப்பிட்ட படம் அல்லாமல் வேறு ஏதேனும் படங்களில் நீங்கள் கேட்டிருந்தாலும் பகிந்து கொள்ளுங்கள்….

2 comments:

  1. Sorry I don't have Tamil alphabets. This investigation between the songs and Thirukural is interesting. Good.

    ReplyDelete
  2. Thanks for the comments Jeyapal and welcome..
    Try http://www.quillpad.in/tamil for tamil fonts, it wud be easier for you...

    ReplyDelete