Tuesday, March 24, 2009

மணிரத்னத்திற்க்கு கிடைக்கல எங்களுக்கு கிடைத்தது….

ரொம்ப நாளா Plan பண்ணி கடந்த வருடம் ஊட்டிக்கு போனோம். தங்கி இருந்த 4 நாட்களில், நாங்கள் ஊட்டியில் ஓர் நாள் கூட இல்லை. ஊட்டியை விட, அதை சுற்றி உள்ள இடங்களில் பார்ப்பது என்ற குறிக்கோளுடன் தான் போனோம். மசினகுடி, முதுமலை, Porthi Mund, Parsan Valley, Upper Bhavani என அத்தனை இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வந்தோம். என் நண்பனின் அப்பா ஊட்டியின் EE ஆக இருந்ததினால் வந்த அனுகூலம் இது.

புது வெள்ளை மழை பாடலை கேட்டு கொண்டே, சிறு தூறலுடன் நடந்தது இந்த இடம் தான்,.Porthi Mund!!!



நதி உருவாகி பொங்கும் இடம், மங்கை மோக கூந்தல்!!



ரோஜா படத்தின் இறுதி காட்சியில் அரவிந்சாமியும் மதுபாலாவும் சந்தித்து கொள்ளும் அந்த இறுதி காட்சி Parsans Valleyல் தான் படமாக்க பட்டது. மணிரத்னம் அந்த காட்சியை Porthi Mundல் படமாக்க திட்டமிட்டு இருந்தார், ஆனால் அனுமதி கிடைக்காததால் Parsan Valleyல் படமாக்கினார். எங்களுக்கு அனுமதி கிடைத்தது, எப்படி நம்ம படம்?.



Upper Bhavani….


ஊட்டிக்கு சென்றால் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள இடங்களை கண்டிப்பாக பாருங்கள். அடுத்த முறை மசினகுடியில் Log Houesல் தங்க முடிவு எடுத்து உள்ளோம். நடு காட்டில் இரவு நேரத்தில்..

2 comments:

  1. படம் நல்லா இருக்கு.

    //மணிரத்னத்திற்க்கு கிடைக்கல எங்களுக்கு கிடைத்தது//

    hi hi

    ReplyDelete
  2. மிக்க நன்றி இனியவன்,
    அது சும்மா Topic நல்லா இருகனுமுல்ல

    ReplyDelete