Wednesday, March 18, 2009

பயணிகளின் கனிவான கவனத்திற்க்கு….

பயணிகளின் கனிவான கவனத்திற்க்கு நான் மிக குறைந்த அளவே ரயிலில் சென்று உள்ளேன்,சென்ற சில பயணங்களிலே சில சிறுகதைக்கான கரு உள்ளதால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடாக இந்த பயணம் இனிதே துவங்குகிறது.


முதல் ரயில் பயணம் - திருவனந்தபுரம் டு சேலம், எதிர் சீட் சேச்சியுடன் இனிதே துவங்கியது, சேச்சி என்றவுடன் உங்கள் மனத்தில் ஒரு பிம்பம் தோன்றி இருக்கும் என்பதினால் அதை கலைக்க விரும்பாமல், சேச்சியை பற்றிய வர்ணனைகளை விடுத்து மேலே தொடர்கிறேன். கையில் ஓர் நாள் இதழ் வைத்து படித்து கொண்டிருந்தார், அதை பார்த்து, பரவா இல்லயெ, நம்ம ஊர் ஆச்சிக்கு கூட மலையாளத்தில் ஒரு நாள்ளிதழே வருகிறதே என பெருமை பட்டு கொண்டேன்.சிறிது நேரம் கழித்து தமிழா என்றார்?, கமல் பிடிக்குமோ என்றார், ஓ!! என்றேன், மலையாளம் அறியுமோ? என்றதற்கு "இச்சிறி அறியும்" என்றேன். மோகன்லால் படம் கண்டுட்டு உண்டோ? என்றார், "ஆங் குறைச்சு என்றேன், வல்லிய Actor ஆனும், மணிச்சிதிராதாழு பாக்கணும் கேட்டோ!! என்று சொல்லி அடுத்த Stationல் இறங்கி போகையில், "இவடயே வீடு, பின்னே ஒரு நாள் தம்பி(அநியன்) வீட்டிருக்கு வரணும்" என்று சொல்லி இறங்கி சென்று விட்டார். முகவரி தரவில்லை.


இரவு நேர Pune நகரம் - 6 மாத காலம் Pune நகர Project வேலையை முடித்து விட்டு ஏப்ரல் 12 ஆன இன்று இரவு ஊர் திரும்புகிறோம். ஏற்கனவே நண்பன் கிருஷ்ணா Ticket எடுத்து விட்டிருந்தான். 6 மாதம் பிழிந்து வேலை வாங்கிய professor இரவு விருந்திற்க்கு அழைத்திருந்தார். நம்ம ஊர்காரர்தான் என்பதால் சப்பாத்தி இல்லாமல், சாப்பாடு நன்றாகவே இருந்தது. இரவு 10 மணிக்கு மேல் எங்கள் இடத்தில் இருந்து ரயில் நிலையத்திற்க்கு பேருந்து வசதி இல்லாததால், 1.30 மணி ரயிலுக்கு 10.30 மணிக்கே வந்து விட்டோம். 1 மணி வரை வாசலில் இருந்து விட்டு, பின் ப்ளாட்பாரம் எண் அறிவித்த உடன் உள்ளே சென்றோம். தமிழில் நாங்கள் பேசி கொண்டிருப்பதை பார்த்து விட்டு எங்கள் அருகே ஒருவர் வந்தார். "தம்பி, இந்த வண்டி எங்கே வரும்னு பார்த்து சொல்லுப்பா என்றார்", 2.30 மணிக்கு 3 வது ப்ளாட்பாரம் வர போகும் ஒரு மதுரை வண்டியின் Ticket அது.எங்கள் வண்டி வந்த உடன், நாங்கள் ஏறி உள்ளே அமர்ந்தோம், ஒரு தாத்தா வந்து, இந்தியில் ஏதோ சொன்னார், நாங்கள் பிச்சை கேட்கிறார் என நினைத்து, திரும்பி கொண்டோம், பின் அவர் கையில் இருந்த Ticketஐ காட்டினார், எங்கள் சீட்டிற்கான Ticket அது. எப்படி ஒரே சீட்டுக்கு ரெண்டு Ticket கொடுக்க முடியும் என என் நண்பன் அவரிடம் அரை குறை இந்தியில் கேட்டு கொண்டிருக்க வண்டி நகர ஆரம்பித்தது, உடனே நான் என் நண்பனின் கையை பிடித்து இழுத்து கொண்டு அவசர அவசரமாக வண்டியில் இருந்து இறங்கினேன். "3 வது ப்ளாட்பாரம் மதுரை Ticket தான் அது ஆனா April 13 ஆம் தேதி ஆன நாளைக்கு போக வேண்டிய Train Ticket அது" என்று ஒருவரை நான் சற்று நேரத்திற்க்கு முன் அனுப்பினேனே அவரை தேடி!!! ரயில் நிலைய கடிகாரத்தில் மணி April13 காலை 1.30யை கடந்து கொண்டிருந்தது.எங்கள் Ticketல் April 12, 1.30 A.M என்று போட்டிருந்தததை சொல்ல தேவை இல்லை தானே??


சத்திய சோதனை - புத்தக கண்காட்சிக்கு இரண்டாவது முறையாக கிளம்பி கொண்டிருந்தேன், "சத்யம்" பிரச்சனையால் மனம் ஒடிநத என் அறை நண்பனையும் கூப்பிட்டு கொண்டு கிளம்பினேன். Velachery ரயில் நிலையத்தில், இரண்டு Chetpet Ticket என்று கேட்டு வாங்கி கொண்டு Port வரை சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் மாறி Chetpet வந்து சேர்ந்தோம். சரியாக Station Master அறை அருகில் இருந்த Berthல் இருந்த நாங்கள் இறங்க, அவர் எங்களிடம் Ticketஐ கேட்டார்.பார்த்து விட்டு, எங்க இருந்து வறீங்க என்றார்? Velachery என்றோம்.Chepauk வரை தான் Ticket எடுத்து இருக்கீங்க என்றார். அலறி அடித்து கொண்டு பார்த்தோம், Sir, Chetpetனு சொன்னது Ticket கொடுக்கிறவர் காதுல Chepaukனு விழுந்திருக்கு ,நாங்க ஒண்ணும் தப்பு பண்ணல. Book Fair க்கு வந்தோம் என்றோம். நான் ஒண்ணும் பண்ண முடியாது வாங்க, Fine கட்டுங்க, ஆளுக்கு 250 எடுங்க என்றார். Sir என்றோம், சரி ஒருத்தராவது கட்டுங்க என்று ஒரு voucherஐ எடுத்தார்.என்ன பண்றீங்க என்றார்?, Software Engineer என்றதற்க்கு அப்ப ரெண்டு பேரு கிட்டயும் வாங்கலாமே என்றார். "சத்யம்" company பரவா இல்லயா என்றான் என் நண்பன்.சற்று நிமிர்ந்து பார்த்தார், பின், என்னப்பா நடக்குது உங்க Companyல என்றார், Board Meeting வச்சி இருக்காங்க, இந்த மாச சம்பளம் வருமானு தெரியல sir என்றான். சரி போங்கப்பா, போகும் போது Ticket எடுத்துக்குங்க என்றார். ஒன்றும் பேசாமல் புத்தக கண்காட்சியை நோக்கி நடந்தோம்.

2 comments:

  1. So, you guys weren't spared of the train timing too! We missed our train too, because of the the misinterpreted timings! ha haa haaa.

    ReplyDelete
  2. S that was one of the Hilarious moment...initially we feel bit tensed, then it was total fun till v reach home.... :-)

    ReplyDelete